திருப்பதி ஏழுமலையான் கோயி லுக்கு தங்க ஆபரணங்கள் காணிக்கை அளித் ததைத் தொடர்ந்து, தெலங்கானா மாநிலம், மெஹபூபாபாத் மாவட்டம், குரவியிலுள்ள வீரபத்ர சுவாமி கோயி லுக்கு "தங்க மீசை’’யை காணிக்கையாக வழங்கியுள் ளார் அந்த மாநில முதல்வர் கே.சந்திர சேகரராவ். வீரபத்ர சுவாமி கோயிலுக்கு 24.2.2017 அன்று குடும்பத்துடன் வருகை தந்த அவர், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்க மீசையை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினார்.
இரண்டு நாள்களுக்கு முன், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அவர் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்களை வழங்கியிருந்தார். தெலங்கானா தனி மாநிலம் உருவாக வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டியிருந்ததாகவும், அந்த வேண்டுதல் நிறைவேறியதால் தங்க ஆபரணங்களை காணிக்கையாக அளித்ததாகவும் அவர் கூறினார். இதனிடையே, இந்த விவகாரத்தில் சந்திரசேகரராவ் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்துவதாக, அவர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தியுள்ளன.
நல்ல வேளை ஜட்டி, பனியன் வகையறாக்களை வழங்காமல் இருந்தாரே?