Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, ஜூலை 27- போர்ப் படிப்பினை மற்றும் சமரச ஆணை யத்தின் பரிந்துரையைச் செயல் படுத்தும் விதமாக தேசிய செயல் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளதாக, இலங்கை அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்கா தெரிவித் துள்ளார். வியாழக்கிழமை செய்தியாளர் களைச் சந்தித்த இலங்கை அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்கா கூறியது: போர்ப் படிப்பினை மற்றும் சமரச ஆணையத்தின் 285 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தேசிய செயல் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

போர் முடிந்து 3 ஆண்டுகளுக்குப் பின் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீரதுங்கா தலைமையிலான சிறு குழு தேசிய செயல் திட்ட வரைவை வடிவ மைத்துள்ளது. மனித உரிமைகள், நில உரிமைப் பாதுகாப்பு, போருக்குப் பின்னான மீள் குடியமர்வு, பாதிப்பு களுக்கான இழப்பீடு உள்ளிட்ட ஏராளமானவற்றை உள்ளடக்கி இவ்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பரிந்துரையும் எந்த அமைச்சரவை அல்லது முகமை மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் திட்டமிடப்பட்டுள்ளது. செயல்படுத்துவதற்கான காலமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ராணுவ வீரர் மனித உரிமையை மீறியிருந்தால், அது தொடர்பான ராணுவ விசாரணை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண் டும். போர்க்குற்றம் 2 ஆண்டுகளுக் குள்ளும், இதர பொது நீதிமன்ற வழக்குகள் 2 ஆண்டுகளுக்குள்ளும் முடிக்கப்பட வேண்டும். பிரதானப் பிரச்சினையான நிலப் பிரச்சினையை 2 ஆண்டுகளுக்குள் தீர்க்க நில ஆணை யம் அமைக்கப்படும். தமிழ் பேசும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் நில உரிமை மாற்றப் பிரச்னை குறித்த அறிக்கை 3 மாதங்களுக்குள் அரசால் சமர்ப்பிக்கப் படும். அரசியல் பங்கேற்பு தொடர் பான போர்ப் படிப்பினை மற்றும் சமரச ஆணையத்தின் பரிந்துரை குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற தேர்வுக் குழு அமைக்கப்படும் என்றார் லலித் வீரதுங்கா. அதேசமயம் இக் குழுவில் இணைய தமிழ் தேசியக் கூட்டணி மறுத்து விட்டது.









.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner