
திருவொற்றியூர், பிப். 4- சென்னையில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு ஆக்கப்பூர்வமாக எதிர்கட்சியாக இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டு வருகிறது.
சட்டமன்றத்தில் எதிர்கட்சி சார்பில் அரசை விமர்சிக்க எல்லா உறுப்பினர்களுக்கும் அதிகாரம் உண்டு. வாதங்களில் ஈடுபடலாம். அதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை 10 நாள்கள் சஸ்பெண்ட் செய்து வைத்திருப்பது தவறு.
சட்டமன்றத்தில் மறு பரிசீலனை செய்யக்கோரி வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.