
சென்னை, ஆக 11- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டெசோ மாநாட்டில் ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசின் வெளி விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்து தனது துரோக முகத்தை காட்டி விட்டது.
மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி மறுத்து இருப்பது ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைப்பதாகும். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேச உரிமை உண்டு என்று நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்று இருக்கிறோம்.
தமிழ் ஈழம் என்று உச்சரிப்பதை தடுக்க உலகில் எந்த சக்தியாலும் முடியாது.