
குமரி, மே 18-தமிழர் தலைவர் அவர்களின் கட்டளைப்படி மாண வர்கள், இளைஞர்கள் மத்தியில் உடல் வளத் தையும் உள்ள வளத் தையும் பேணும் வகை யில் பெரியார் வீர விளையாட்டுக் கழகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம், குருந்தன்கோடு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் மாபெ ரும் கராத்தே பயிற்சி முகாம் கன்னியாகுமரி மாவட்டம், தலக்குளம் கரையான் விளையில் 18.5.2012 வெள்ளிக் கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த துவக்கவிழா நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் திங்கள் நகர் ம.ப.நூர்தீன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், திராவிடர் கழக குருந்தன்கோடு ஒன்றிய தலைவர், பெ.சுப்பிர மணியம், கழக திங்கள் நகர் கிளைத் தலைவர் சா.பாலையன் ஆகி யோர் முன்னிலை வகித் தனர். கழக மாநில பொதுக்குழு உறுப்பி னர் ம.தயாளன், கராத்தே பயிற்சிமுகாமினை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.
கழக கன்னியாகுமரி மாவட்ட அமைப்பா ளர் ஞா.பிரான்சிஸ், கழக மாவட்ட மகளி ரணி தலைவர் ச.ச.மணி மேகலை, நாகர்கோவில் நகர துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க் முக மது, திங்கள் நகர் கிளைக் கழக செயலா ளர் தா.ஜெபராஜ், மயிலாடி கிளைக் கழக தலைவர் கே.வெங்கடா சலம், வெட்டூர்மணி மடம் ம.செல்வராசு, மணி மற்றும் ஏராளமா னோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கராத்தே பயிற்றுநர் தலக்குளம் ஆ.சிவக் குமார் மாணவர்கள் மற்றும் இளைஞர் களுக்கு கராத்தே பயிற்சி வகுப்பினை நடத்தினார். திங்கள் நகர் தலக்குளம் பகுதியினை சார்ந்த 40க்கும்மேலான மாணவ-மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு வீர விளையாட்டான கராத்தே பயிற்சி பெற் றனர். இந்த பயிற்சி முகாம் மே 18 (இன்று) தொடங்கி மே 30 வரை தொடர்ந்து நடைபெறு கிறது.