தஞ்சாவூர், பிப்.20 தஞ்சாவூரில் இன்று (20.02.2019) காலை 10.30 மணியளவில் தஞ்சை திலகர் திடலில் வரும் பிப்ரவரி 23, 24 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமூகநீதி மாநாடுகளை முன்னிறுத்தி திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் திலகர் திடலில் உள்ள பந்தலில் செய்தியாளர்களை சந்தித்து, மாநாட்டு நிகழ்வுகள் குறித்தும் தற்போது எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் செய்திகளை பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்பில் பொதுச் செயலாளர்....... மேலும்
20 பிப்ரவரி 2019 17:15:05
கோவையில் நடைபெறவிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் அழைப்பிதழை திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் வழங்கினார். உடன் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன். (20.2.2019, பெரியார் திடல்) மேலும்
20 பிப்ரவரி 2019 17:08:05
காரைக்குடி திராவிட மணி சார்பில் ரூ.ஒரு லட்சத்தினை என்னாரெசு பிராட்லா தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சிறீவில்லிபுத்தூர், 17.2.2019) இராஜபாளையம் இல.திருப்பதி மாநாட்டுநிதியாக ரூ.30 ஆயிரம், விடுதலை ஆதவன் ரூ.10 ஆயிரம், வானவில் மணி ரூ.10 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சிறீவில்லிப்புத்தூர், 17.2.2019) திராவிடர் கழக தொழிலாளரணி சார்பில் திருவெறும்பூர் சேகர் ரூ. ஒரு லட்சத்தினை மாநாட்டுநிதியாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 20.2.2019) சென்னை மண்டலச் செயலாளர் கொடுங்கையூர் கோபால், மாநாட்டு நிதியாக....... மேலும்
20 பிப்ரவரி 2019 16:53:04
சென்னை.பிப். 20 ஆவடி மாவட்டம் அயப் பாக்கத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தஞ்சை இரா. பெரியார் செல்வன் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையைத் தூண்டும் வகையில் பேசி, பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற இருபால் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ஆவடி மாவட்டம் அயப் பாக்கத்தில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டிலும் கடந்த 4.2.2019 ஆம் தேதி பெரியார் 1000 வினாவிடைப்....... மேலும்
20 பிப்ரவரி 2019 15:59:03
சென்னை, பிப்.20 நம்மை சூத்திரன் என்றும், வேசி மக்கள் என்றும் இழிவுபடுத்தும் மனுதர்மம் 7.2.2019 அன்று தமிழ்நாட்டிலுள்ள மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத்தினரால் எரிக்கப்பட்டது. அவ்விவரம் வருமாறு: ஈரோடு 07.02.2019 வியாழன் முற்பகல் 11 மணியளவில் ஈரோடு பேருந்து நிலையம் முன்பு திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் கழகத் தோழர்கள் ஒன்று கூடி மனுதர்மத்தை ஒலி முழக்கத்துடன் எரிக்க முயன்ற போது 28 தோழர்கள் ஈரோடு மாநகர காவல்துறையினரால் கைது....... மேலும்
20 பிப்ரவரி 2019 15:58:03
22.2.2019 வெள்ளிக்கிழமை ‘பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு’ சென்னை: * நேரம்: காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை * இடம்: அறை எண் 48, நவீன குளிரூட்டப்பட்ட அரங்கு, டவர் கிளாக் கட்டடம், இந்திய வரலாற்றுத் துறை, சென்னை பல்கலைக்கழகம் * தலைப்பு: ‘பெரியாரின் நடைமுறைத் தத்துவம்’ * உரையாற்றுபவர்: பேராசிரியர் முனைவர் எஸ்.பன்னீர்செல்வம், மேனாள் தலைவர், இந்திய வரலாற்றுத்துறை, சென்னை பல்கலைக்கழகம் * அழைப்பு: பேராசிரியர் எஸ்.எஸ். சுந்தரம், தலைவர் இந்திய வரலாற்றுத் துறை,....... மேலும்
20 பிப்ரவரி 2019 15:50:03
காரைக்கால் மண்டலத்தில் சமுக நீதி மாநில மாநாட்டிற்கான கடைவீதி வசூல் பணியில் காரைக்கால் மண்டல இளைஞர் அணியின் தலைவர் நாத்திக பொன்முடி, மண்டல இளைஞர் அணியின் செயலாளர் பெரியார் கணபதி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மண்டல துணை தலைவர் பதி.செயசங்கர், பொதுக் குழு உறுப்பினர் அன்பானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். மேலும்
20 பிப்ரவரி 2019 15:44:03
கடலூர் மண்டல இளைஞரணி செயலாளராக இருந்து வந்த திராவிடன் என்பவர் கழகக் கொள்கைக்கு விரோதமாகவும், கழக நிலைப்பாட்டினைப் புரியாமலும் சமூக வலைதளங்களில் தான் தோன்றித்தனமாக பதிவு செய்து வருவதால் கழகத்தின் கட்டுப்பாடு கருதி அவர் கழகத்திலிருந்து நீக்கப்படுகிறார். கடலூர் மண்டல இளைஞரணி செயலாளராக தோழர் நா. பஞ்சமூர்த்தி நியமிக்கப்படுகிறார். - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் முகவரி: நா. பஞ்சமூர்த்தி, வேகாக்கொல்லை, குறிஞ்சிப்பாடி வழி - 607302 கைப்பேசி: 9367631024 மேலும்
19 பிப்ரவரி 2019 16:17:04