
கோவை, மே 18-2012 கல்வி ஆண்டு துவங்கும் நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவை குறிச்சி சந்திரசேகர் இல்லத்தில் 14.5.2012 திங்கள் மாலை 5.30 மணிக்கு துவங்கி நடைபெற்றது.
கோவை மண்டல தி.க. செய லாளர் ம.சந்திரசேகர் தலைமையிலும், குறிச்சி நகர செயலாளர் புண் ணியமூர்த்தி, தோழர் சா.சிவக்குமார் ஆகி யோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பயிற்சி யாளர்களாக கோவை யில் இயங்கி வரும் பல்வேறு கணிப்பொறி நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்து வரும் இளையராஜா, கல்வி அகம் கு.வெ.கி. செந்தில், கோதண்ட ராமன் ஆகியோரும் இணைந்து தமிழகத்தில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களையும், பெருகிவரும் வேலை வாய்ப்புகளையும், எதிர் காலத்தில் மாணவர்கள் எதை நோக்கி பயணிக்க வேண்டும் எதைப் படிப் பதினால் நமது அறி வாற்றல் பெருகி வேலை வாய்ப்பில் நிலைத்து நிற்க முடியும் என்பது பற்றி 2 மணிநேரம் வந் திருந்த மாணவர்களுக் கும், கழகத் தோழர்க ளுக்கும் எடுத்துக்கூறி னார்.
நிகழ்ச்சியில் இயக்க குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தி.க. கார் முகிலி, தி.க. யாழினி, த.க.கவுதமன், க.சி.தமிழ் நியூட்டன், த.க. யாழினி, பு.கதீனாமூர்த்தி, க.சி.இனியா, பு.க. பூங் குழலி, வி.வனிதா, ராசி, பிரபாகரன், க.ஜெய கிருஷ்ணன், க.ஜெயந்தி ம.சக்தி, ஆ.குமரவேல், கெ.ஜோ.பிரியதர்சினி, ரா.கீர்த்திகா, ஆ.விக் னேஷ், இ.பிரபாகரன், திருநாவுக்கரசு, புனிதா, இராகுல், கழக மகளி ரணிதோழியர்கள் ராஜேஸ்வரி, திலகமணி, ஜோதி, கவிதா, செல்வி, வளர்மதி, ஆ.நத்திலா, தேவிகா, பிரீத்தி, மற் றும் கழகத் தோழர்கள் பழனிச்சாமி, இருதய ராஜ், குரு, சிவக்குமார், வெற்றிச்செல்வன், நாக ராஜ் இன்னும் கழகம் சாராத பல்வேறு மாண வர்களும் இப்பயிற் சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை கோவை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் தி.க. தமிழ் முரசு ஒருங்கிணைத்து நடத்தினார். இரவு 8.30 மணிக்கு இப்பயிற்சி நிறைவுபெற்றது.
கோவையில் இயக் கம் சார்ந்து நடத்திய கல்வி வழிகாட்டுதல் பயிற்சியில் பல்வேறு கேள்விகளுக்கான விடைகளை மாணவர் கள் கேட்டுப் பெற்ற துடன், மாணவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும்? என தக்க ஆலோசனைகளை பயிற்சியாளர்கள் அளித் தனர்.
கணிப்பொறி சம் பந்தமான நிறுவனங் கள், பயன்தரும் படிப்பை வழங்கி வரும் கல்லூ ரிகள், குறைந்த செலவில் நிறைந்த பயனைத்தரக் கூடிய கல்வி சம்பந்த மான விபரங்கள் ஆகிய பயனுள்ள நல்ல தக வல்களை பயிற்சியா ளர்கள் வழங்கியது, வந் திருந்த அனைவர்க்கும் அருமருந்தாய் திகழ்ந் தது. திராவிடர் கழகம் இதைபோன்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து செய்தால் ஏராளமான மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பேசி கொண்டது இயக்கத் திற்கு மேலும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்தது எனலாம்.