Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

ஈழம்

கொழும்பு, மே 7-  இலங் கையின் முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசி யக் கட்சி தடைப்பட்டி ருந்த அரசுடனான பேச்சு வார்த்தைகளைத் தொடர்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த போதிலும்,  இனப் பிரச் சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கான திட்டத்தைத் தயாரிப்ப தற்கான அனைத்துக் கட்சி கலந்துரையாட லுக்கு முன்பு, இரு தரப்பு பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும் புகிறது.

தமிழ் மக்கள் பெரும் பான்மையினராக இருக் கும் மாகாணங்களில் அதிகாரப் பகிர்வுக்காக அரசுக்கும் தமிழ் தேசி யக் கட்சிக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சு வார்த்தைகள் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஜனவரி மாதம் முதல் தடைப் பட்டுள்ளன. முக்கிய மான கருத்து வேறுபாடு மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரம் அளிப்பது பற்றியதாகும். இக்கருத்து வேறுபாட் டினை அடுத்து, இப் பிரச்சினையை நாடாளு மன்ற தேர்வுக் குழுவிற் குக் கொண்டு செல்ல ராஜபக்சே அரசு முடிவு செய்தது.

தேர்வுக் குழுவை சந் திப்பதற்கு முன்பு, அர சுடன் தடைப்பட்டுப் போயிருக்கும் பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடங்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசிய கட்சி இப்போது கூறு கிறது.

பலதரப்பு பேச்சு வார்த்தைகள் தொடங் கும் முன், அரசுடனான இருதரப்பு பேச்சுவார்த் தைகளில் முன்னேற்றம் ஏற்படவேண்டும்  என்று நாங்கள் அரசிற்குத் தெரி வித்துள்ளோம் என்று தமிழ்தேசியக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேம சந்திரன் கூறினார். ராஜ பக்சேயின் நாடாளுமன்ற தேர்வுக் குழு கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பிரேமசந்திரன் பலதரப் பட்ட பேச்சு வார்த்தை களைப் பற்றி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு தொடங் கிய தமிழ்த் தேசியக் கட்சி - அரசு பேச்சு வார்த்தைகள் பெரும் அளவில் முன்னேற்றம் காணவில்லை.

நாடாளுமன்றத் தேர் வுக் குழுவை சந்திப்பதில் தங்களுக்கு உள்ள தயக் கத்தை தமிழ்த் தேசியக் கட்சி வெளிப்படுத்தியுள் ளது. பேச்சுவார்த்தை களை முடக்குவதற்காக அதிபர் ராஜபக்சே அரசு மேற்கொள்ளும் ஒரு தந்திரம் இது என்று அது நம்புகிறது. தமிழ்த் தேசி யக் கட்சிதான் தமிழர் களின் ஒரே ஒரு பிரதிநிதி என்ற அடையாளத்தை அளிப்பதற்கு விரும்பாத அரசு பிரச்சினையை நாடாளுமன்றத் தேர்வுக் குழு மூலம் தீர்க்க விரும் புகிறது என்று தமிழ்த் தேசி யக் கட்சி கருதுகிறது.

ஆளுங்கூட்டணியில் உள்ள தீவிர தேசியவா தக் கட்சிகள் நாடாளு மன்ற தேர்வுக் குழுவில்  என்ன நிலையை மேற் கொள்ள உள்ளன என் பது பற்றியும், சிறுபான்மை தமிழ் மக்களுக்கு அர்த்த முள்ள எந்த உரிமையை யும் பெறுவதற்கு அவர் கள் உதவுவார்களா என் பது பற்றியும் தமிழ்த் தேசியக் கட்சி அய்யம் கொண்டதாகவே உள்ளது.

கொழும்பு, மே 4- இலங்கையின் யாழ்ப் பாணம் நகரில் நடந்த மே தினப் பேரணி யில் சிலர் விடுதலைப் புலிகளின் கொடி களைக் காட்டியதாக கூறப்படும் சம் பவம், அரசே நடத்திய நாடகம் என்று எதிர்க்கட்சியான அய்க்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.

தங்களை தேச விரோத சக்திகள் என்று காட்டுவதற்காகவே இதுபோன்ற செயல்களை அரசு செய்கிறது என்றும் அந்தக் கட்சி கூறியிருக்கிறது.

அந்தப் பேரணியில் யாரும் விடு தலைப் புலிகளின் கொடியைக் காட்ட வில்லை. அப்படியொரு சம்பவத்தை யாரும் பார்க்கவும் இல்லை'' என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அட்டநாயக தெரிவித்தார்.
இந்தச் சம்பவமே அரசுக்குச் சொந்த மான அய்.டி.என். தொலைக்காட்சி திட்ட மிட்டு அரங்கேற்றிய நாடகம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அய்டிஎன் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள்தான் புலிகளின் கொடி யைக் காட்டியதாகக் கூறும் அய்க்கிய தேசியக் கட்சி எம்பியான ஹரீண் பெர்னாண்டோ, கொடியைக் காட்டி யவர்கள் அய்டிஎன் தொலைக் காட் சிக்குச் சொந்தமான வாகனத்தில் வந்ததாகவும் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தொலைக் காட்சி நிறுவனத் தலைவர் ரோஸ்முண்ட் செனரத்னவுக்கு அய்க்கிய தேசியக் கட்சியின் தலைவர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கடிதம் எழுதியுள்ளார். அதில், தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் கொடியை தொலைக்காட்சியில் காட்டு வது சட்டத்தை மீறும் செயல் என்று அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பேரணிக்கு ஏற்பாடு செய்த அய்க்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட் டமைப்பும் விடுதலைப் புலிகளுக்கு ஆதர வான கட்சிகள் என்றும், தேச விரோத சக்திகள் என்றும் முத்திரை குத்துவதற் காக இந்தச் சதிச் செயல் அரங்கேற்றப் பட்டிருக்கிறது என்று தமிழர் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலை வர் மனோ கணேசன் குற்றம்சாட்டினார்.
இந்தப் பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இலங்கை தேசியக் கொடியைப் பிடித் திருந்ததன் முக்கியத்துவத்தை சிங்க ளர்கள் உணராதது கவலையளிக்கிறது'' என்று தெரிவித்தார்.

கொழும்பு, மே 3- இலங் கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை, அமெரிக்க வெளியுற வுத்துறை துணை அமைச் சர் பார்வையிட்டு வரு கிறார்.

இலங்கையில், ராணு வத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த சண்டை காரண மாக, தமிழர்கள் வசிக் கும் பகுதிகளில் அதிக அளவில் கண்ணி வெடி கள் புதைக்கப்பட்டன. இலங்கை ராணுவத்தை தடுக்கும் வகையில், விடு தலைப் புலிகள் இந்த கண்ணி வெடிகளை ஏராளமான அளவில் புதைத்துள்ளனர்.

வட கிழக்கில் உள்ள அம்பாறை, அனுராத புரம், மட்டகளப்பு, யாழ்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத் தீவு, பொலனருவா, திரிகோணமலை, வவு னியா ஆகிய, 10 மாவட் டங்களுக்குட்பட்ட, 124 கி.மீ., பரப்பளவில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட் டுள்ளன.
இந்த கண்ணி வெடி களை அகற்ற, கடந்த 93ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா, இலங்கை அரசுக்கு, 3.45 கோடி டாலர் அளவுக்கு நிதியு தவி அளித்துள்ளது. புலிகளுடனான போர் முடிந்த பிறகு, இந்த கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை பார்வையிட, அமெரிக்க வெளியுற வுத்துறைத் துணை அமைச்சர் வால்டர் டி கிவான் தலைமையிலான வல்லுநர் குழு, இலங்கை வந்துள்ளது. புலிகளுட னான சண்டை முடிந்த பிறகு, ஒரு லட்சத்து ஆயி ரத்து 827 ஹெக்டேர் வயல்வெளியிலும், 29 ஆயிரத்து 999 ஹெக் டேர் நீர்நிலைகளிலும், 538 கி.மீ., நெடுஞ்சாலை களிலும், 1,500 கி.மீ., தூர மற்ற சாலைகளிலும், 263 கி.மீ., ரயில் பாதைகளி லும் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக, இலங்கை அரசு தெரி வித்துள்ளது.

இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள வால் டர் டி கிவான் தலைமை யிலான குழு, கண்ணி வெடி அகற்றும் பணி களை பார்வையிட்ட பின், அந்நாட்டின் பாது காப்பு செயலர் கோத்த பையாவையும், ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரி யாவையும், கடற்படை தளபதி திசநாயகாவை யும் சந்தித்து பேச உள் ளது.


கொழும், ஏப். 28- முள்ளி வாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக் கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக் கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படா மல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந் தது என்று அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா தெரிவித் துள்ளார்.

ஜெயசூரியாவின் இந் தப் பேச்சு, ராஜபக்சே வுக்கு எதிரான போர்க் குற்றசாட்டுக்கு தேவை யான வலுவான ஆதார மாக பின்னர் உருவெடுக் கும் வாய்ப்புகள் அதிக ரித்துள்ளன.

ஈழத்தில் நடந்த இறு திக்கட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் விஷ கொத்துக்குண்டு கள் வீசி 40,000 தமிழர் கள் கொல்லப்பட்டனர். இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக அய்.நா. சபை யில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் இலங்கை அரசு பல்வேறு நெருக் கடிகளை சந்தித்து வரு கிறது.

இந்நிலையில் இலங் கையின் குருநாகல் பகுதி யில் நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு ராணுவ தள பதி ஜெகத் ஜெயசூரியா ராஜபக்சே சொல்லித் தான் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த தமிழர் களை ராணுவம் நிர்மூல மாக்கியதாக கூறியுள்ளார்.

சீனா, ரஷ்யா, இந்தியா உதவி

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 2009ஆம் ஆண்டு இலங் கையின் வடக்கு பகுதி யில் சீனா, ரஷ்யா, இந் தியா போன்ற நாடுகளின் உதவியோடு போர் நடத் தினோம். கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதி யில் போர் நடத்துவதா வேண்டாமா என்று தோன்றியது. ஏனென் றால் அந்த பகுதியில் 45,000க்கும் அதிகமான தமிழர்கள் வசித்து வந்தனர். அங்கு குண்டு போட்டால் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்களே என்று நினைத்தோம். மேலும் இறுதிகட்டப் போரை நடத்தக் கூடாது என்று பல்வேறு நாடு களும் வலியுறுத்தின.

இதையடுத்து அதிபர் ராஜபக்சேவிடம் ஆலோ சனை நடத்தினோம். அப் போது அவர் எக்கார ணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம் என் றும் பன்னாட்டு மிரட் டல்களுக்கு அடிபணி யாமல் தொடர்ந்து திட் டமிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்று என் னிடம் தொலைபேசி மூலம் உத்தரவிட்டார்.

அவர் கொடுத்த தைரி யத்தில் தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. மேலும் போர்க் காலத்தில் அவர்தான் எங்களுக்கு பலமாக இருந்தார். அவர் மட் டும் மனிதாபிமான அடிப் படையில் இரக்கம் காட் டியிருந்தால் நம்மால் இறுதிகட்டப்போரில் வென்றிருக்க முடியாது. இறுதிகட்டப் போரில் நாம் வெல்ல உறுதுணை யாக இருந்த நாடுகளை யும், அவர்கள் செய்த உத விகளையும் மறக்கவே முடியாது என்றார் ஜெய சூர்யா.

கொத்து கொத்தாக கொன்றோம்

ஜெயசூர்யாவின் இந் தப் பேச்சு மூலம் கடை சிக் கட்ட போரின்போது மிகக் கொடூரமாக தமி ழர்கள் கொலை செய் யப்பட்டது உண்மை தான் என்பது உறுதியாகி யுள்ளது. மேலும் ராஜ பக்சே சொல்லித்தான் தாங்கள் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றோம் என்பதை யும் இந்த ஜெயசூர்யா கூறியுள்ளதால் இது ராஜபக்சேவின் போர்க் குற்ற செயல்பாடுகளுக் கான வலுவான ஆதார மாக, வாக்குமூலமாக உரு வெடுக்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.

கொழும்பு, ஏப். 27- இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கையின் இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக அய்.நா.சபையில் தீர்மானம் கொண்டுவரப் பட்டது. இந்நிலையில் வடக்கு இலங்கை பகுதியில் உள்ள தமிழர்களை சிங்கள ராணுவம் சித்ரவதை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதை இலங்கை அரசு மறுத்தது.  இந்நிலையில் கிளி நொச்சி பகுதியில் வெடிகுண்டு வெடித்து 2 தமிழ் சிறுவர்கள் பலியானார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:- கிளிநொச்சி அடுத்த பளை-முல்லையடி பகுதியை சேர்ந்தவர் ராஜன். கூலி தொழிலாளி. இவரது மகன்கள் தமிழ்மாறன் (4), சுனோஜன் (2). இருவரும் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந் தனர். அப்போது அங்கு கிடந்த வெடிகுண்டை எடுத்து கீழே போட்டனர். அப்போது வெடி குண்டு வெடித்து 2 பேரும் அதே இடத்தில் உடல் சிதறி இறந்தனர். இச்சம்பவம் கிளிநொச்சி பகுதியில் உள்ள தமிழர்களிடையே பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.