
கொழும்பு, மே 7- இலங் கையின் முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசி யக் கட்சி தடைப்பட்டி ருந்த அரசுடனான பேச்சு வார்த்தைகளைத் தொடர்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த போதிலும், இனப் பிரச் சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கான திட்டத்தைத் தயாரிப்ப தற்கான அனைத்துக் கட்சி கலந்துரையாட லுக்கு முன்பு, இரு தரப்பு பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும் புகிறது.
தமிழ் மக்கள் பெரும் பான்மையினராக இருக் கும் மாகாணங்களில் அதிகாரப் பகிர்வுக்காக அரசுக்கும் தமிழ் தேசி யக் கட்சிக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சு வார்த்தைகள் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஜனவரி மாதம் முதல் தடைப் பட்டுள்ளன. முக்கிய மான கருத்து வேறுபாடு மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரம் அளிப்பது பற்றியதாகும். இக்கருத்து வேறுபாட் டினை அடுத்து, இப் பிரச்சினையை நாடாளு மன்ற தேர்வுக் குழுவிற் குக் கொண்டு செல்ல ராஜபக்சே அரசு முடிவு செய்தது.
தேர்வுக் குழுவை சந் திப்பதற்கு முன்பு, அர சுடன் தடைப்பட்டுப் போயிருக்கும் பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடங்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசிய கட்சி இப்போது கூறு கிறது.
பலதரப்பு பேச்சு வார்த்தைகள் தொடங் கும் முன், அரசுடனான இருதரப்பு பேச்சுவார்த் தைகளில் முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்று நாங்கள் அரசிற்குத் தெரி வித்துள்ளோம் என்று தமிழ்தேசியக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேம சந்திரன் கூறினார். ராஜ பக்சேயின் நாடாளுமன்ற தேர்வுக் குழு கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பிரேமசந்திரன் பலதரப் பட்ட பேச்சு வார்த்தை களைப் பற்றி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு தொடங் கிய தமிழ்த் தேசியக் கட்சி - அரசு பேச்சு வார்த்தைகள் பெரும் அளவில் முன்னேற்றம் காணவில்லை.
நாடாளுமன்றத் தேர் வுக் குழுவை சந்திப்பதில் தங்களுக்கு உள்ள தயக் கத்தை தமிழ்த் தேசியக் கட்சி வெளிப்படுத்தியுள் ளது. பேச்சுவார்த்தை களை முடக்குவதற்காக அதிபர் ராஜபக்சே அரசு மேற்கொள்ளும் ஒரு தந்திரம் இது என்று அது நம்புகிறது. தமிழ்த் தேசி யக் கட்சிதான் தமிழர் களின் ஒரே ஒரு பிரதிநிதி என்ற அடையாளத்தை அளிப்பதற்கு விரும்பாத அரசு பிரச்சினையை நாடாளுமன்றத் தேர்வுக் குழு மூலம் தீர்க்க விரும் புகிறது என்று தமிழ்த் தேசி யக் கட்சி கருதுகிறது.
ஆளுங்கூட்டணியில் உள்ள தீவிர தேசியவா தக் கட்சிகள் நாடாளு மன்ற தேர்வுக் குழுவில் என்ன நிலையை மேற் கொள்ள உள்ளன என் பது பற்றியும், சிறுபான்மை தமிழ் மக்களுக்கு அர்த்த முள்ள எந்த உரிமையை யும் பெறுவதற்கு அவர் கள் உதவுவார்களா என் பது பற்றியும் தமிழ்த் தேசியக் கட்சி அய்யம் கொண்டதாகவே உள்ளது.