Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

இந்தியா

வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தால் விவசாய பணிகள் பாதிப்பா?

புதுடில்லி, மே 18-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தால், விவ சாய பணிகள் பாதிக்க மத்திய அரசு அனுமதிக் காது என மக்களவை யில் கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய் ராம் ரமேஷ் கூறினார்.

மக்களவையில் நேற்று கேள்விநேரத்தின் போது, பதில் அளித்த அமைச்சர் ஜெய் ராம் ரமேஷ் கூறியதாவது:

கிராம மக்களின் தேவைக்காக கொண்டு வரப்பட்ட திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம். இதனால்,விவசாய பணிகள் பாதிக்க மத்திய அரசு அனுமதிக்காது. இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு கோரும் மக்களின் எண்ணிக்கை 5.5 கோடியிலிருந்து 5 கோடியாக குறைந் துள்ளது.

அதனால் இந்த நிதியாண்டில் இத்திட் டத்திற்கான நிதி ஒதுக் கீட்டை குறைத்துள் ளோம். இத்திட்டத்தின் மூலம் கிராம மக்கள், நகரங்களுக்கு இடம் பெயர்வது குறைந்துள் ளது. வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான கூலி, விலைவாசி உயர் வுக்கு தகுந்தவாறு ஒவ் வொரு ஆண்டும் மறு பரிசீலனை செய்யப் படுகிறது.

கடந்த 2006ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மூலம் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் பயனடைகின்றனர். இத்திட்டத்தின் செயல் பாட்டை மத்திய தணிக்கை துறை கண் காணிக்கிறது. இதன் அறிக்கை மக்களவை யில் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும். இத்திட்டத்தில் முறைகேடு நடக்கிறதா என இனி தீவிரமாக கண்காணிக்கப்படும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார். தமி ழகத்துக்கு

கூடுதல் நிதி

மக்களவையில் அதி முக எம்.பி. தம்பிதுரை பேசுகையில், 100 நாள் வேலை திட்டத்தில் தமி ழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு பதி லளித்த ஜெய்ராம் ரமேஷ், தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இத்திட் டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ரூ.5,800கோடி தமிழகத்துக்கு ஒதுக்கப் பட்டுள்ளது என்றார்.

செகன்மோகன் ரெட்டி நிறுவன சொத்துக்களை பறிக்க சி.பி.அய். நடவடிக்கை

அய்தராபாத், மே.18- பல கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு புகாரில் சிக்கியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி யின் நிறுவனங்களின் சொத்துக் களைப் பறிமுதல் செய்ய சி.பி.அய். நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆந்திராவில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மருத்துவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல் அமைச்சர் பதவி வகித்தபோது, அதைப் பயன்படுத்தி அவரது மகன் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி வருமானத்துக்கு மீறி பல கோடி ரூபாய் சொத்துக்களை குவித் துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சி.பி.அய். விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான டெலிவிஷன் சானல், பத்திரிகை மற்றும் ஒரு நிறுவனத்தின் வங்கிக்கணக்குகளை சி.பி.அய். கடந்த 10 நாட்களுக்கு முன்பு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, ``எனது ஊடகங்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பட்டப்பகலில் நடந்த ஜனநாயகப் படுகொலை. அரசியல் ரீதியாக என்னை சந்திக்க முடியாமல் தோற் றுப்போனவர்கள், எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி உள்ளனர்'' என்றார்.

இந்த நிலையில், இதுவரை நடத் தியுள்ள விசாரணையின் அடிப்படை யில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான டெலிவிஷன் சானல், பத்திரிகை மற்றும் ஒரு நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சி.பி.அய். நடவடிக்கை எடுத்து வரு கிறது.

இது தொடர்பாக அனுமதி கோரி அரசுக்கு சி.பி.அய். கடிதம் எழுதி உள் ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் இந்த 3 நிறுவனங்களின் சொத்துக் களும் பறிமுதல் செய்யப்படும் என சி.பி.அய். வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நடவடிக்கை, ஜெகன் மோகன் ரெட்டிக்கு பெருத்த பின்ன டைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

விவாகரத்து ஆன பெண்களுக்கு கணவர் சொத்தில் பங்கு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி, மே 18- விவாகரத்து ஆன பெண்களுக்குக் கணவரின் அசையா சொத்தில் பங்கு அளிப்பதற்கான சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டில்லி மேலவையில் கடந்த 2 ஆம் தேதி, திருமண சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், அம்மசோதாவை தாக்கல் செய்தார்.

பரஸ்பர விருப்பத்துடன் விவாகரத்து கேட்டு மனு செய்யும் தம்பதிகளுக்கு, அவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய 6 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அந்த கால அவகாசத்தை ரத்து செய்யும் வகையில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.

ஆனால், அந்த மசோதா, பெண்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதாகவும், விவாகரத்து பெறுவது எளிதாகி விட்டால், பெண்கள் தங்களது உரிமைகளை இழக்க நேரிடும் என்றும் டெல்லி மேலவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அச்சம் தெரிவித்தனர்.

மசோதா அவசர கதியில் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சல்மான் குர்ஷித், மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளிப்பதை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், டில்லி மேலவையில் நிலுவையில் உள்ள இந்த திருத்த மசோதாவில் மேலும் திருத்தங்கள் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விவாகரத்து என்பது பெண்களுக்கு சாதகமானதாக இருக்க வேண்டும் என்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த புதிய திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

இதன்படி, பரஸ்பர விருப்பத்துடன் விவாகரத்து கேட்டாலும், 6 மாத காலம் பொறுத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை தொடர்ந்து கடைப்பிடிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

ஒருவேளை, இந்த 6 மாத கால அவகாசத்தை ரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ விரும்பினால், கணவன்-மனைவி இருவருமே சேர்ந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று புதிய திருத்தங்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு தரப்பு மட்டும் விண்ணப்பிக்க முடியாது.

மேலும், விவாகரத்து ஆன பெண்களுக்கும், அவருடைய குழந்தைகளுக்கும் கணவரின் அசையா குடியிருப்பு சொத்துகளில் தெளிவாக வரையறுக்கப்பட்ட பங்கு உண்டு என்றும் இந்த புதிய திருத்தங்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த பங்கைப் பெற, விவாகரத்து பெற்ற பிறகு, மனைவி தனியாக மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை ரூ.5 உயர்கிறது: மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி, மே. 18- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமை யல் எரிவாயு போன் றவற்றின் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப் பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே அத்தியா வசியப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு தயங்கிய படி உள்ளது.

விலையை உயர்த்தாத காரணத்தால் இந்திய எண்ணெய் நிறுவனங் கள் கடும் வருவாய் இழப்பை சந்தித்து வரு கின்றன. இனியும் இந்த இழப்பை தாங்க முடி யாது என்பதால், தாங் களே பெட்ரோலிய பொருட்கள் விலையை உயர்த்தப் போவதாக எண்ணெய் நிறுவனங் கள் எச்சரித்தன.

இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு ஆலோ சித்து வருகிறது. தற் போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருவதால், 22-ஆம் தேதி கூட்டத்தொடர் முடிந்த பிறகே இது தொடர் பான முடிவுகளை மத் திய அரசு வெளியிடும் என்று தெரியவந்துள் ளது.

எனவே அடுத்த வார இறுதியில் பெட்ரோல் விலை உயர வாய்ப்புள் ளது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.9 வரை உயர்த்த வேண்டும் என்று இந்திய எண்ணெய் நிறுவனங் கள் வலியுறுத்தி வரு கின்றன. ஆனால் அந்த அளவுக்கு விலையை உயர்த்த மத்திய அரசு விரும்பவில்லை.

ஏழை மற்றும் நடுத் தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பெட்ரோல், டீசல் விலையை குறைந்த அளவே உயர்த்த அரசு நினைக்கிறது. ஆனால் குறைந்தபட்சம் ரூ.6 அல்லது ரூ.7 என்ற அளவுக்காவது உயர்த்த வேண்டும் என்று எண் ணெய் நிறுவனங்கள் கூறிவருகின்றன.

எனவே பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4 அல்லது ரூ.5ஆக மத்திய அரசு உயர்த்தும் என்று தகவல்கள் வெளி யாகியுள்ளது. டீசல் விற் பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.3 வரை இழப்பு ஏற்படுகிறது. எனவே டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயரக் கூடும்.

எடியூரப்பா பிணை தள்ளி வைப்பு

பெங்களூரு, மே.18- சட்டவிரோத சுரங்க தொழில் தொடர்பாக சி.பி.அய். அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் எடியூரப்பா மற்றும் அவரது மகன்கள், மருமகன், சுரங்க நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஆவணங்களை சி.பி.அய். அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

இதை தொடர்ந்து சி.பி.அய். அதிகாரிகள் தங்களை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்று கருதிய எடியூரப்பா மற்றும் அவரது மகன்கள் ராகவேந்திரா எம்.பி., விஜயேந்திரா மற்றும் மருமகன் ஷோகன் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு பெங்களூரு சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

முன்ஜாமீன் மனுக்கள் நேற்று சி.பி.அய். கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. அப்போது முன்ஜாமீன் மனுக்கள் மீதான தங்கள் ஆட்சே பணையை தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என்று சி.பி.அய். தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் எடியூரப்பா மற்றும் சி.பி.அய். சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் வாதிடுகையில், ``இந்த வழக்கை விடுமுறை கால நீதிமன்றம் விசாரிக்க கூடாது, சாதாரண அமர்வு தான் விசாரிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டனர்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிவலிங்கே கவுடா, முன் பிணை மனுக்கள் மீதான விசா ரணையை சாதாரண அமர்வுக்கு மாற்றி உத்தர விட்டார். அத்துடன் மனுக்கள் மீதான விசா ரணையை இம்மாதம் 25ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்