Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

தேசிய தீவிரவாத தடுப்பு மய்யம் அமைக்க எதிர்ப்பு எதிரொலி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

7 மாநில முதல்-அமைச்சர்களுக்கும் மன்மோகன்சிங் கடிதம்

புதுடில்லி, பிப்.22- தேசிய தீவிரவாத தடுப்பு மய்யம் அமைக்க ஜெய லலிதா, மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு முதல்- அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அதைத் தொடர்ந்து 7மாநில முதல்-அமைச்சர் களுக்கு பிரதமர் மன் மோகன்சிங் கடிதம் எழுதி இருக்கிறார்.

தீவிரவாதத்தை ஒடுக்கு வதற்காக, மார்ச் 1-ஆம் தேதி முதல் தேசிய தீவிர வாத தடுப்பு மய்யம் அமைக்கப்படும் என்று, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது.

மத்திய உள்துறையின் கீழ் செயல்படும் இந்த மய்யம், நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நட வடிக்கைகளை ஒருங்கி ணைந்து ஆய்வு செய்யும். மாநிலஅரசுகளின் அனுமதி இல்லாமலேயே மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தவும், கைது நடவடிக்கை மேற் கொள்ளவும் இந்த அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந் தது.

தேசிய தீவிரவாத தடுப்பு மய்யம் அமைப் பது மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடும் நடவடிக்கை என்று கூறி, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த முடிவை மறு பரிசீலனை செய்யும் படி வற்புறுத்தி, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 2 கடிதங்களை அவர் எழுதி இருக்கிறார்.

இதேபோல், மேற்கு வங்காள மாநில முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி, மற்றும் எதிர்க்கட்சிகள் ஆட்சி நடைபெறும் மேலும் 7 மாநில முதல்-அமைச்சர்களும் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து போர்க்கொடி தூக்கி இருந்தனர்.
அதைத் தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட 7 மாநில முதல்-அமைச்சர் களுக்கு இந்த பிரச்சினை குறித்து பிரதமர் மன் மோகன்சிங் கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத் தில் அவர் கூறி இருப்ப தாவது-

கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற மத் திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் நாட்டில் உளவு தகவல்களை ஒருங் கிணைப்பதற்காக, கூட்டுப் பணிக்குழு அமைக்க வேண்டும்என்று யோசனை தெரிவித்து அறிக்கை தாக்கல் செய் யப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தேசிய தீவிரவாத தடுப்பு மய்யம் அமைப்பது குறித்து மத்திய அரசு பரி சீலித்து வந்ததை நீங்கள் அறிந்து இருக்கலாம். அப்போது இருந்த மத்திய அரசால் இந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தது.

2-ஆவது நிருவாக சீர் திருத்த கமிஷனும், தேசிய தீவிரவாத தடுப்பு மய்யம் அமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்து இருந்தது. தேசிய தீவிர வாத தடுப்பு மய்யம் அமைப்பதன் மூலம், அரசியல் அமைப்பு சட் டத்தின் அடிப்படை அம் சங்களையோ, மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே ஒதுக்கப்பட்டு இருக்கும் அதிகாரங் களையோ பாதிக்கச் செய்யும் எந்த நோக்கமும் அரசுக்கு இல்லை.

நாடு முழுவதும் தீவிர வாதத்துக்கு எதிரான நட வடிக்கைகளை ஒருங்கி ணைப்பதுதான், இந்த ஆணையம் அமைக்கப் படுவதன் முதன்மை யான நோக்கமாகும். இதுவரைஇந்த பணியை மத்திய புல னாய்வுப் பிரிவு (அய்.பி.) செய்து வந்தது. புதிதாக அமைக்கப்பட இருக்கும் தேசிய தீவிர வாத தடுப்பு மையம், இதே புலனாய்வு பிரி வின் கீழ்தான் செயல் படுமே தவிர இது ஒரு தனி அமைப்பு அல்ல.

இருந்த போதிலும், புதிய மய்யத்தின் செயல் பாடு குறித்து தாங்கள் தெரிவித்துள்ள கவலை களை கவனத்தில் கொண்டுள்ள நான், உங்களுடனும் மற்ற மாநில முதல்-அமைச் சர்களுடனும் கலந்து பேசி, அவற்றுக்கு உரிய தீர்வு காணும்படி மத் திய உள்துறை அமைச் சருக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்''.
-இவ்வாறு அந்த கடிதத்தில் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார்.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தவிர திரிபுரா, ஒடிசா, குஜராத், மேற்கு வங் காளம், பீகார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய முதல்-அமைச் சர்களுக்கு இந்த கடி தத்தை மன்மோகன் சிங் எழுதி இருக்கிறார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்