Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

இந்தியச் செய்திகள்

செகன்மோகன் ரெட்டி நிறுவன சொத்துக்களை பறிக்க சி.பி.அய். நடவடிக்கை

அய்தராபாத், மே.18- பல கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு புகாரில் சிக்கியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி யின் நிறுவனங்களின் சொத்துக் களைப் பறிமுதல் செய்ய சி.பி.அய். நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆந்திராவில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மருத்துவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல் அமைச்சர் பதவி வகித்தபோது, அதைப் பயன்படுத்தி அவரது மகன் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி வருமானத்துக்கு மீறி பல கோடி ரூபாய் சொத்துக்களை குவித் துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சி.பி.அய். விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான டெலிவிஷன் சானல், பத்திரிகை மற்றும் ஒரு நிறுவனத்தின் வங்கிக்கணக்குகளை சி.பி.அய். கடந்த 10 நாட்களுக்கு முன்பு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, ``எனது ஊடகங்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பட்டப்பகலில் நடந்த ஜனநாயகப் படுகொலை. அரசியல் ரீதியாக என்னை சந்திக்க முடியாமல் தோற் றுப்போனவர்கள், எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி உள்ளனர்'' என்றார்.

இந்த நிலையில், இதுவரை நடத் தியுள்ள விசாரணையின் அடிப்படை யில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான டெலிவிஷன் சானல், பத்திரிகை மற்றும் ஒரு நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சி.பி.அய். நடவடிக்கை எடுத்து வரு கிறது.

இது தொடர்பாக அனுமதி கோரி அரசுக்கு சி.பி.அய். கடிதம் எழுதி உள் ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் இந்த 3 நிறுவனங்களின் சொத்துக் களும் பறிமுதல் செய்யப்படும் என சி.பி.அய். வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நடவடிக்கை, ஜெகன் மோகன் ரெட்டிக்கு பெருத்த பின்ன டைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

எடியூரப்பா பிணை தள்ளி வைப்பு

பெங்களூரு, மே.18- சட்டவிரோத சுரங்க தொழில் தொடர்பாக சி.பி.அய். அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் எடியூரப்பா மற்றும் அவரது மகன்கள், மருமகன், சுரங்க நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஆவணங்களை சி.பி.அய். அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

இதை தொடர்ந்து சி.பி.அய். அதிகாரிகள் தங்களை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்று கருதிய எடியூரப்பா மற்றும் அவரது மகன்கள் ராகவேந்திரா எம்.பி., விஜயேந்திரா மற்றும் மருமகன் ஷோகன் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு பெங்களூரு சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

முன்ஜாமீன் மனுக்கள் நேற்று சி.பி.அய். கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. அப்போது முன்ஜாமீன் மனுக்கள் மீதான தங்கள் ஆட்சே பணையை தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என்று சி.பி.அய். தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் எடியூரப்பா மற்றும் சி.பி.அய். சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் வாதிடுகையில், ``இந்த வழக்கை விடுமுறை கால நீதிமன்றம் விசாரிக்க கூடாது, சாதாரண அமர்வு தான் விசாரிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டனர்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிவலிங்கே கவுடா, முன் பிணை மனுக்கள் மீதான விசா ரணையை சாதாரண அமர்வுக்கு மாற்றி உத்தர விட்டார். அத்துடன் மனுக்கள் மீதான விசா ரணையை இம்மாதம் 25ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

டில்லி உயர்நீதிமன்றத்தில் `ஏர்-இந்தியா' விமானிகள் மனு தள்ளுபடி

புதுடில்லி, மே 18- தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை `சட்டவிரோதம்' என டில்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, டில்லி உயர்நீதிமன்றத்தில் `இந்தியா விமானிகள் கில்டு' அமைப்பு வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்து வரும் நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் மற்றும் ராஜிவ் ஷக்தேர் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்சு, அந்த மனுவை தள்ளுபடி செய்து, நேற்று தனது தீர்ப்பை அளித்தனர்.

அவர்கள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:-

`விமானிகளின் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானதும், பெருங்குற்றமும் ஆகும். தனி நீதிபதி அளித்த தீர்ப்பை மதிக்காமலும், தொடர்ந்து பணிக்கு வராமல் இருக்கும் விமானிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்தத் தீர்ப்பில் தெரிவித்தனர்.

கேரள மாநிலத்தில் மீன் பிடிக்க தடை

திருவனந்தபுரம், மே 17- கேரள மாநில கடல் பகுதியில் வருகிற ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை மீன் பிடிக்க தடை விதிப்பது என அமைச்சர் கே.பாபு தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.
கேரள மாநில கடல் பகுதிகளில் மீன்களின் இனப் பெருக்கத்தை கருத் தில் கொண்டு, மீன் பிடிக்க தடை விதிப்பது சம்பந்தமான ஆலோ சனை கூட்டம் திருவனந் தபுரத்தில் நடந்தது. கூட் டத்துக்கு துறைமுக வளர்ச் சித் துறை அமைச்சர் கே. பாபு தலைமை வகித்தார்.
கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் பாபு செய்தி யாளர்களிடம் கூறியதா வது:-
கேரள மாநில கடல் பகுதியில், மீன்களின் இனப் பெருக்கத்தை கருத் தில் கொண்டு, வருகிற ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடை அமலுக்கு வருவதற்கு முன்னதாக, வெளி மாநில மீன்பிடி படகுகள் கேரள கடல் பகுதியில் இருந்து சென்று விட வேண்டும்.
அனைத்து மாவட்டங் களிலும் ஆட்சியர்கள் தலைமையில் மீன்பிடி தொழிலாளர் சங்க பிரதி நிதிகளுடன் ஆலோச னைக் கூட்டங்கள் நடத் தப்படும். கடலோர பாது காப்பு படையினருடன் மாவட்ட ஆட்சியர்கள் தொடர்பு கொண்டு இதற் கான நடவடிக்கைகளை மேற் கொள்வார்கள்.
மீன்பிடிக்கும் தொழில் தடை செய்யப்படுவதால் மீன்கள் கிடைப்பது குறையும். தற்போதைய மீன்பிடி தொழில் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு நிபுணர்கள் குழுவினர் நியமிக்கப்படுவர்.
மீன்பிடி படகுகளுக் கான மண்ணெண்ணெய் வழங்குவது தொடர்பாக ஜூன் 17ஆம் தேதி ஆய்வு நடத்தி முடிவு செய்யப் படும். - இவ்வாறு அவர் கூறினார்.

கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி!

 

 

திருமலை, மே 17-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணக் காரர்களுக்கும், நடிகை, நடிகர் களுக்கும் தான் தேவஸ்தானம் முக்கியத்துவம் அளிக்கிறது என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி கடந்த வாரம் வந்தார். அங்குள்ள சிறீகிருஷ்ணா விடுதி யில் தங்கினார். இவரை

ஏழு மலையான் கோயில் பிரதான அர்ச்சகராக உள்ள ரமண தீட்சிதர் நேரில் சென்று பிரசாதம் வழங்கி வாழ்த்தினாராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கூறுகையில், சாதாரண ஏழை மக்களை தேவஸ்தானம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கோடீஸ்வரரான ஆனந்த் அம் பானியை நேரில் சென்று சந்தித்து பிரதான அர்ச்சகர் பிரசாதம் வழங்கி உள்ளார். தொழில் அதி பர்களுக்கும், நடிகை, நடிகர் களுக்கும் தான் தேவஸ்தானம் மரியாதை கொடுக்கிறது. சாதா ரண மக்களை கண்டுகொள்வ தில்லை என குற்றம் சாட்டினர்.


இதுகுறித்து தலைமைச் செயல் அலுவலர் எல்.வி. சுப்பிரமணி கூறியதாவது:
தேவஸ்தானப் பணியாளர்கள், கீழ்மட்டம் முதல் பிரதான அர்ச்சகர் வரை கோவிலின் புனித தன்மையை காப்பாற்றுவதில் அக்கறையுடனும், கவனத்துட னும் இருக்க வேண்டும். பிரதான அர்ச்சகரின் இதுபோன்ற நட வடிக்கை தவறானது.


மேலும் தேவஸ்தானம் அவரை அர்ச்சகராக நியமிக்க வில்லை. அவர் பரம்பரையான மிராசு முறைப் படி அர்ச்சகராக இருந்து வருகிறார். மிராசு முறை நியமனம் ஏற்கெனவே ரத்து செய் யப்பட்டது. ஆனால் ஒய்எஸ்ஆர் முதல்வராக இருந்தபோது மீண்டும் மிராசு முறை கொண்டு வரப்பட்டது. அதன்படி ரமண தீட்சிதர் பணி செய்து வருகிறார். பரம்பரை நியமனம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள் ளது. இதனால் அவர் மீது நாங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது.


இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமலிருக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரமண தீட்சிதர் அம்பானி குடும்பத் தினரை நேரில் சந்தித்து ஆசி வழங்கியுள்ளார். அப்போது இருந்த தலைமை செயல் அலு வலர் கிருஷ்ணாராவ், ரமண தீட்சி தருக்கு நோட்டீஸ் வழங்கி உள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்பிரச்சினை குறித்து ரமண தீட்சிதர் கூறுகையில், எனது தந்தை காலத்தில் இருந்தே அம்பானி குடும்பத்தினருடன் நட்பு உள்ளதால், நான் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வாழ்த்தி வந்தேன் என்றார்.

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்