Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

புதுடில்லி

வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தால் விவசாய பணிகள் பாதிப்பா?

புதுடில்லி, மே 18-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தால், விவ சாய பணிகள் பாதிக்க மத்திய அரசு அனுமதிக் காது என மக்களவை யில் கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய் ராம் ரமேஷ் கூறினார்.

மக்களவையில் நேற்று கேள்விநேரத்தின் போது, பதில் அளித்த அமைச்சர் ஜெய் ராம் ரமேஷ் கூறியதாவது:

கிராம மக்களின் தேவைக்காக கொண்டு வரப்பட்ட திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம். இதனால்,விவசாய பணிகள் பாதிக்க மத்திய அரசு அனுமதிக்காது. இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு கோரும் மக்களின் எண்ணிக்கை 5.5 கோடியிலிருந்து 5 கோடியாக குறைந் துள்ளது.

அதனால் இந்த நிதியாண்டில் இத்திட் டத்திற்கான நிதி ஒதுக் கீட்டை குறைத்துள் ளோம். இத்திட்டத்தின் மூலம் கிராம மக்கள், நகரங்களுக்கு இடம் பெயர்வது குறைந்துள் ளது. வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான கூலி, விலைவாசி உயர் வுக்கு தகுந்தவாறு ஒவ் வொரு ஆண்டும் மறு பரிசீலனை செய்யப் படுகிறது.

கடந்த 2006ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மூலம் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் பயனடைகின்றனர். இத்திட்டத்தின் செயல் பாட்டை மத்திய தணிக்கை துறை கண் காணிக்கிறது. இதன் அறிக்கை மக்களவை யில் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும். இத்திட்டத்தில் முறைகேடு நடக்கிறதா என இனி தீவிரமாக கண்காணிக்கப்படும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார். தமி ழகத்துக்கு

கூடுதல் நிதி

மக்களவையில் அதி முக எம்.பி. தம்பிதுரை பேசுகையில், 100 நாள் வேலை திட்டத்தில் தமி ழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு பதி லளித்த ஜெய்ராம் ரமேஷ், தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இத்திட் டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ரூ.5,800கோடி தமிழகத்துக்கு ஒதுக்கப் பட்டுள்ளது என்றார்.

பெட்ரோல் விலை ரூ.5 உயர்கிறது: மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி, மே. 18- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமை யல் எரிவாயு போன் றவற்றின் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப் பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே அத்தியா வசியப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு தயங்கிய படி உள்ளது.

விலையை உயர்த்தாத காரணத்தால் இந்திய எண்ணெய் நிறுவனங் கள் கடும் வருவாய் இழப்பை சந்தித்து வரு கின்றன. இனியும் இந்த இழப்பை தாங்க முடி யாது என்பதால், தாங் களே பெட்ரோலிய பொருட்கள் விலையை உயர்த்தப் போவதாக எண்ணெய் நிறுவனங் கள் எச்சரித்தன.

இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு ஆலோ சித்து வருகிறது. தற் போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருவதால், 22-ஆம் தேதி கூட்டத்தொடர் முடிந்த பிறகே இது தொடர் பான முடிவுகளை மத் திய அரசு வெளியிடும் என்று தெரியவந்துள் ளது.

எனவே அடுத்த வார இறுதியில் பெட்ரோல் விலை உயர வாய்ப்புள் ளது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.9 வரை உயர்த்த வேண்டும் என்று இந்திய எண்ணெய் நிறுவனங் கள் வலியுறுத்தி வரு கின்றன. ஆனால் அந்த அளவுக்கு விலையை உயர்த்த மத்திய அரசு விரும்பவில்லை.

ஏழை மற்றும் நடுத் தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பெட்ரோல், டீசல் விலையை குறைந்த அளவே உயர்த்த அரசு நினைக்கிறது. ஆனால் குறைந்தபட்சம் ரூ.6 அல்லது ரூ.7 என்ற அளவுக்காவது உயர்த்த வேண்டும் என்று எண் ணெய் நிறுவனங்கள் கூறிவருகின்றன.

எனவே பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4 அல்லது ரூ.5ஆக மத்திய அரசு உயர்த்தும் என்று தகவல்கள் வெளி யாகியுள்ளது. டீசல் விற் பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.3 வரை இழப்பு ஏற்படுகிறது. எனவே டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயரக் கூடும்.

பெட்ரோல் விலை மீண்டும் உயருகிறது

புதுடில்லி, மே 18- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயருகிறது. டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையும் ஏறுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலவரத்துக்கு ஏற்றபடி, இந்தியாவில் பெட்ரோலிய பொருள்களின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்த முடியாது.

பெட்ரோல் விலையை மட்டும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதிகாரம் வழங்கியது. ஆனாலும் விலை உயர்த்தும்போது எண்ணெய் கம்பெனிகள், மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை உள்ளது.

அரசியல் நிர்ப்பந்தம், பணவீக்கம், அமெரிக்க டாலர் விலையுடன் ஒப்பிடுகையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி என பல்வேறு காரணங்களால் நினைத்தபடி பெட்ரோலின் விலையைக்கூட உயர்த்த முடியாத நிலையில் எண்ணெய் கம்பெனிகள் உள்ளன.

இதன் காரணமாக இந்திய எண்ணெய்க்கழகம், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை நிறுவனங்கள் கூட்டாக நாள்தோறும் பெட்ரோல் விற்பனை மூலம் சுமார் ரூ.50 கோடி இழப்பினை சந்தித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இது தவிர, மத்திய அரசே விலை நிர்ணயம் செய்து வருகிற டீசல், மண்எண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றையும் குறைந்த விலைக்கே எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. இதன்மூலம் தினந்தோறும் சுமார் ரூ.575 கோடி இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.

பெட்ரோல் விலையை குறைந்தபட்சம் லிட்டர் ஒன்றுக்கு ரூ.8 அளவுக்கு உயர்த்த அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

அப்படி பெட்ரோல் விலை உயர்வுக்கு அனுமதி தராவிட்டால், மத்திய அரசு மானியம் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன.

ஏற்கெனவே பிற பெட்ரோலிய பொருள்களுக்கான மானியங்களை படிப்படியாக குறைத்து, அறவே நீக்கி விட முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ள போது, பெட்ரோல் விற்பனை இழப்பினை ஈடுகட்டும் வகையில் எண்ணெய் கம்பெனிகளுக்கு இழப்பீடு வழங்காது என்பது உறுதி.

இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லி மேல்-சபையில் நிதி மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்து கொண்டிருக்கிறது. விலை உயர்வை மறைத்து வைத்துவிட முடியாது. நாம் சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், நாம் பயங்கரமான விளைவுகளை சந்திக்க தயாராகி விட வேண்டும்.

அதே நேரத்தில் ஒட்டுமொத்த சுமையையும் பொதுமக்கள் மீது திணிக்க மாட்டோம். தனிப்பட்ட முறையில் மக்கள் இந்த விலையேற்றத்தை சந்திக்கிறபோது, இது பணவீக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இதையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எனவே பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் கேட்கிறபடி லிட்டருக்கு ரூ.8 அளவுக்கு உயர்த்தாமல் ரூ.5 என்கிற அளவுக்கு விலை உயர்த்த அரசு அனுமதி வழங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் டீசல் விலையையும் அரசு லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 அளவுக்கு உயர்த்தும். இதேபோன்று வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.50 அளவுக்கு உயர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் செவ்வாய்க்கிழமை முடிகிறது. அதன்பின்னர் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு கூடி, பெட்ரோல், டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்த முடிவு எடுக்கும். எனவே அதைத் தொடர்ந்து விலை உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

திருப்பதி இடைத்தேர்தல் கெடுபிடி ஏழுமலையானுக்கு வருவாய் இழப்பு

திருமலை, மே 17-திருப் பதி இடைத்தேர்தல் கெடுபிடி எதிரொலியாக ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை வசூல் கடந்த ஆண்டை விட ரூ.14 கோடி குறைந் துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


திருமலை ஏழுமலை யானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி போன்ற வற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். திருமலையில் பக்தர்கள் கூட்டம் தற்போது அலை மோதுகிறது. சுவாமி தரி சனம் செய்ய 10 மணி நேரத் துக்கு மேல் பக்தர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் கடந்த வாரம் உண்டியல் காணிக்கை எண்ணும்பணி நடந்தது. இதில் கடந்த ஆண்டை விட காணிக்கை வசூல் மிகவும் குறைந்துள்ளது.


இதுகுறித்து தேவஸ் தான அதிகாரிகள் கூறு கையில், கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரம் ரூ.40 கோடி உண்டி யல் காணிக்கையாக கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு ரூ.26கோடி மட்டுமே கிடைத்துள் ளது. தற்போது திருப்பதி இடைத்தேர்தல் நடை பெற உள்ளதால், பல இடங்களில் காவல்துறை யினர் வாகன தணிக்கை நடத்துகின்றனர். ரூ.ஒரு லட்சத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால், அதற்கு உரிய கணக்கு களை அவர்கள் வைத் திருக்க வேண்டும். இத னால் தேவையில்லாமல் பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால் பக்தர்கள் பணம் கொண்டு வரு வதை குறைத்துள்ளனர்.

நாட்டின் வளர்ச்சிக்கு அணுமின் சக்தி அவசியம் மன்மோகன் சிங் விளக்கம்

புதுடில்லி, மே 17-அணுமின் சக்தி தேவை யில்லை என்று சட்டம் இயற்றினால் அது நாட் டுக்கு கேடாக அமையும் என்று பிரதமர் மன் மோகன் கூறியுள்ளார்.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சிவசேனா உறுப்பினர் ஆனந்த் கீதே பேசுகை யில், ஜப்பானில் நடந்த புகுஷிமா அணுஉலை விபத்துக்கு பிறகு, அணு மின் உற்பத்தி செய்யப் போவதில்லை என்று ஜப் பான் அறிவித்துள்ளது. அணு உலைகளை மூடப் போவதாக ஜெர்மனியும் அறிவித்துள்ளது. அணு மின் சக்தி தொடர்பாக இந்தியாவும் மறு சிந் தனை செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் புகு ஷிமாவில் நடந்த விபத் துக்கு பிறகு, நாடு முழுவ தும் உள்ள 20 அணுமின் நிலையங்களில் பாது காப்பு ஏற்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய் யப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியாக இருப்பதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.
ஜப்பானை போன்ற நிலைமை இந்தியாவில் இல்லை. அணுமின் நிலை யங்களில் இருந்து தேவைக்கு அதிகமா கவே அணுமின் சக்தியை ஜப்பான் பெற்றுள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங் களை மூடுவோம் என் றுதான் ஜெர்மனியும் கூறியுள்ளது. ஆனால், இந்தியாவில் தேவைக்கு ஏற்ற அளவு மின்சக்தி இல்லை. எனவே, நாட் டின் வளர்ச்சிக்கும் மின் தேவையை கருத்தில் கொண்டும் அணுமின் சக்திக்கான வாய்ப்பை இந்தியா திறந்து வைக்க வேண்டி உள்ளது. அணு மின் சக்தியின் பயன்பாடு தவிர்க்க முடியாதது. அணு மின் சக்தி தேவையில்லை என்று சட்டம் இயற்றி னால் அது நாட்டுக்கு கேடாக அமையும். அதே நேரம், அணுமின் நிலைய பாதுகாப்பு விஷ யத்தில் சமரசத்துக்கே இடமில்லை. இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.


கூடங்குளத்தில் கதிர்வீச்சு அபாயம் இல்லை
முன்னதாக பேசிய பிரதமர் அலுவலகத் துறை இணை அமைச் சர் நாராயணசாமி, அணு மின் நிலையங்களைச் சுற்றியுள்ள இடங்களில் கதிர்வீச்சின் அளவு அணு சக்தி ஒழுங்குமுறை வாரி யம் நிர்ணயித்த அளவை விட மிகவும் குறைவா கவே உள்ளது. கூடங் குளத்தில் கதிர்வீச்சு அபா யம் இல்லை. அணுமின் நிலையங்களைச் சுற்றி யுள்ள பகுதிகளில் வசிக் கும் மக்களுக்கு மருத் துவ பரிசோதனைகள் செய்யப்படும். அணுமின் சக்தி குறித்து இந்திய அணுசக்தி கழகம் கையே டுகள், மற்றும் ஊடக பிரச்சாரங்கள் மூலம் மக் களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்றார்.

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்