
புதுடில்லி, மே 18-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தால், விவ சாய பணிகள் பாதிக்க மத்திய அரசு அனுமதிக் காது என மக்களவை யில் கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய் ராம் ரமேஷ் கூறினார்.
மக்களவையில் நேற்று கேள்விநேரத்தின் போது, பதில் அளித்த அமைச்சர் ஜெய் ராம் ரமேஷ் கூறியதாவது:
கிராம மக்களின் தேவைக்காக கொண்டு வரப்பட்ட திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம். இதனால்,விவசாய பணிகள் பாதிக்க மத்திய அரசு அனுமதிக்காது. இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு கோரும் மக்களின் எண்ணிக்கை 5.5 கோடியிலிருந்து 5 கோடியாக குறைந் துள்ளது.
அதனால் இந்த நிதியாண்டில் இத்திட் டத்திற்கான நிதி ஒதுக் கீட்டை குறைத்துள் ளோம். இத்திட்டத்தின் மூலம் கிராம மக்கள், நகரங்களுக்கு இடம் பெயர்வது குறைந்துள் ளது. வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான கூலி, விலைவாசி உயர் வுக்கு தகுந்தவாறு ஒவ் வொரு ஆண்டும் மறு பரிசீலனை செய்யப் படுகிறது.
கடந்த 2006ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மூலம் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் பயனடைகின்றனர். இத்திட்டத்தின் செயல் பாட்டை மத்திய தணிக்கை துறை கண் காணிக்கிறது. இதன் அறிக்கை மக்களவை யில் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும். இத்திட்டத்தில் முறைகேடு நடக்கிறதா என இனி தீவிரமாக கண்காணிக்கப்படும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார். தமி ழகத்துக்கு
கூடுதல் நிதி
மக்களவையில் அதி முக எம்.பி. தம்பிதுரை பேசுகையில், 100 நாள் வேலை திட்டத்தில் தமி ழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு பதி லளித்த ஜெய்ராம் ரமேஷ், தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இத்திட் டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ரூ.5,800கோடி தமிழகத்துக்கு ஒதுக்கப் பட்டுள்ளது என்றார்.