Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

மற்றவை

விவாகரத்து ஆன பெண்களுக்கு கணவர் சொத்தில் பங்கு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி, மே 18- விவாகரத்து ஆன பெண்களுக்குக் கணவரின் அசையா சொத்தில் பங்கு அளிப்பதற்கான சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டில்லி மேலவையில் கடந்த 2 ஆம் தேதி, திருமண சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், அம்மசோதாவை தாக்கல் செய்தார்.

பரஸ்பர விருப்பத்துடன் விவாகரத்து கேட்டு மனு செய்யும் தம்பதிகளுக்கு, அவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய 6 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அந்த கால அவகாசத்தை ரத்து செய்யும் வகையில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.

ஆனால், அந்த மசோதா, பெண்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதாகவும், விவாகரத்து பெறுவது எளிதாகி விட்டால், பெண்கள் தங்களது உரிமைகளை இழக்க நேரிடும் என்றும் டெல்லி மேலவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அச்சம் தெரிவித்தனர்.

மசோதா அவசர கதியில் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சல்மான் குர்ஷித், மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளிப்பதை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், டில்லி மேலவையில் நிலுவையில் உள்ள இந்த திருத்த மசோதாவில் மேலும் திருத்தங்கள் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விவாகரத்து என்பது பெண்களுக்கு சாதகமானதாக இருக்க வேண்டும் என்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த புதிய திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

இதன்படி, பரஸ்பர விருப்பத்துடன் விவாகரத்து கேட்டாலும், 6 மாத காலம் பொறுத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை தொடர்ந்து கடைப்பிடிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

ஒருவேளை, இந்த 6 மாத கால அவகாசத்தை ரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ விரும்பினால், கணவன்-மனைவி இருவருமே சேர்ந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று புதிய திருத்தங்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு தரப்பு மட்டும் விண்ணப்பிக்க முடியாது.

மேலும், விவாகரத்து ஆன பெண்களுக்கும், அவருடைய குழந்தைகளுக்கும் கணவரின் அசையா குடியிருப்பு சொத்துகளில் தெளிவாக வரையறுக்கப்பட்ட பங்கு உண்டு என்றும் இந்த புதிய திருத்தங்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த பங்கைப் பெற, விவாகரத்து பெற்ற பிறகு, மனைவி தனியாக மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எடியூரப்பா வீட்டில் சி.பி.அய். சோதனை: தவறு செய்தவர்கள் கட்டாயம் தண்டனை அனுபவிக்க வேண்டும் சித்தராமையா பேட்டி

 

பெங்களூரு, மே 17- தவறு செய்தவர்கள் தகுந்த தண்டனை கட்டாயம் அனுபவிக்க வேண்டும் என்று எடியூரப்பா வீட் டில் சி.பி.அய். சோதனை நடத்தியது குறித்து சித் தராமையா கருத்து தெரி வித்தார்.
சட்டவிரோத சுரங்க தொழில் குறித்து எடியூ ரப்பா மீது விசாரணை நடத்தி வரும் சி.பி.அய். அதிகாரிகள், நேற்று அவ ரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார் கள். இதுகுறித்து ஊப்ளி யில் சட்டசபை எதிர்க் கட்சி (காங்கிரஸ்) தலை வர் சித்தராமையா செய் தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநிலத்தில் சட்ட விரோதமாக நடந்த சுரங்க தொழில் காரண மாக பல லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டு உள் ளது. இதற்கு அனுமதி அளித்ததாக எடியூரப்பா மீது சி.பி.அய். விசா ரணை நடத்தி வருகிறார் கள். சி.பி.அய். சோதனை நடத்தியதை நான் வர வேற்கிறேன். அந்த விசா ரணை அறிக்கையை விரைவில் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
சட்ட விரோதமாக சுரங்க தொழில் நடத்திய வர்களுக்கு அனுமதி கொடுத்ததன் மூலம் கர்நாடக மக்களுக்கு எதிராக அநியாயம் நடந்து உள்ளது. எனவே தவறு செய்தவர்கள் மீது நீதி மன்றம் மூலம் கட்டா யம் தகுந்த தண்டணை கிடைக்க வழி செய்ய வேண்டும். அந்த தண் டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.
அப்போதுதான் லஞ் சம், ஊழல் போன்ற பிரச் சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மாநில மக் களை ஏமாற்றுபவர்க ளுக்கு சரியான தண் டனை கிடைத்தால், அதுபோன்ற தவறு களை மற்றவர்கள் செய்ய பயப்படுவார்கள். அப் போதுதான் மக்களுக்கு மரியாதை கிடைக்கும். - இவ்வாறு சித்தராமையா கூறினார்.

27 சதவிகித இட ஒதுக்கீடு: புதிய சட்ட திருத்தத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

புதுடில்லி, மே 17- மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் சட்டம், கடந்த 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளைக் களைவதற்காக கொண்டு வரப்பட்ட புதிய சட்ட திருத்தத்துக்கு நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது தொடர்பான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டிற்கு பாடுபட மத்திய அரசு உறுதி பூண்டு இருப்பதாக தெரிவித்தார்.

பாடப்புத்தகங்களில் இருந்து அரசியல் கேலிச் சித்திரங்கள் நீக்கப்படும்

அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவிப்பு

புதுடில்லி, மே 15- பள்ளி பாடப் புத்தகங் களில் இருந்து அரசியல் கேலிச் சித்திரங்கள் நீக் கப்படும் என்று அமைச் சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி. இ.ஆர்.டி) கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியிட்ட 11ஆம் வகுப்பு பாட புத் தகத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் கேலிச் சித்திரங்கள் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது பற்றி கடந்த வாரம் நாடாளு மன்றத்தில் திடீரென பிரச்சினை எழுப்பப் பட்டது.

இதற்காக மன் னிப்பு கேட்டுக் கொண்ட மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல், சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரம் தொடர்பாக ஏற்கனவே அரசுக்கு தக வல் கிடைத்ததாகவும், அந்த கேலிச் சித்திரத்தை புத்தகத்தில் நீக்க அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மக் களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேலிச் சித்திரம் விவ காரத்தை எம்.பி.க்கள் மீண்டும் எழுப்பினர். அகாலி தள உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர், சமாஜ் வாடி உறுப்பினர் சைலேந் திர குமார் ஆகியோர் பேசுகையில், சர்ச்சைக் குரிய கேலிச் சித்திரத்தை உடனடியாக நீக்க உத் தரவிடவேண்டும் என்று வலியுறுத்தினர்.

மற்ற பாடபுத்தகங் களில் இடம் பெற் றுள்ள சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரங்களின் நகல்களை சபாநாயகர் மீரா குமாரிடம் சைலேந் திரகுமார் ஒப்படைத் தார். இந்த விவகாரத்தில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங் கிரஸ் உறுப்பினர்கள் சஞ்சய் நிரூபம், லால் சிங் ஆகியோரும் கோரினர்.

அப்போது, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் அவையில் இல்லாததால் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பன் சால் விளக்கம் அளித் தார். நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்படு வதற்கு முன்பே சர்ச் சைக்குரிய கேலி சித்திரம் பற்றி அரசுக்கு தகவல் கிடைத்தது. உடனடி யாக அதை பாடபுத்த கத்தில் இருந்து நீக்க உத்தரவிடப்பட்டது என்று பன்சால் கூறினார்.

பின்னர், நிதி அமைச் சர் பிரணாப் முகர்ஜி பேசுகையில், அரசியல் கேலிச் சித்திரங்கள் மற் றும் சர்ச்சைக்குரிய பகு திகள் அனைத்து பள்ளி பாட புத்தகங்களில் இருந்து நீக்கப்படும். சர்ச்சைக்குரிய பாடங் கள், கேலிச் சித்திரங்கள் அடங்கிய புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங் கப்படாது என்று அறி வித்தார். இந்த விவகாரம் ஜீரோ அவரிலும் எழுப் பப்பட்டது. அப்போது, அமைச்சர் கபில் சிபல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ., தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் வலியுறுத் தினர்.

இதற்கிடையே, சர்ச் சைக்குரிய கேலிச் சித்தி ரம் விவகாரம் தொடர் பாக என்.சி.இ.ஆர்.டி முன்னாள் ஆலோசகர் சுகாஸ் பல்ஷிகாரின் புனே அலுவலகம் சூறை யாடப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

குடியரசு சிறுத்தை கள் கட்சியை சேர்ந்த அவர்களை காவல்துறை யினர் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி கொடுத்தார்.

ஜெகன்மோகன் ரெட்டிக்கு சி.பி.அய். சம்மன்

கர்னூல், மே 15- ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவரும், கடப்பா தொகுதி எம்.பி.யுமான ஜெகன்மோகன்ரெட்டி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.அய். வழக்கு தொடர்ந்தது.

ஆந்திராவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் ஜெகன்மோகன் உள்ளார்.

சி.பி.அய். சிறப்பு கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் வழக்கு தொடர்பாக அவர் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ 28 ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சி.பி.அய். சம்மன் அனுப்பியது.

ஜெகன்மோகன்ரெட்டி நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று ஏற்கெனவே அந்த கட்சி தெரிவித்துள்ளது.

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்