Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

தமிழகம்

விருதுநகர், மே 18-விருதுநகர் மாவட்டத் திலும் டெங்கு காய்ச்சல் பரவியது. 8 வயது சிறு வன் டெங்கு காய்ச்ச லுக்கு பலியானான்.

நெல்லை மாவட்டத் தில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி இருக்கிறது.

டெங்கு காய்ச்சல் நோயை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்த ஆய்வு கூட்டம் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சாரல் அரங்கில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் டாக் டர் விஜய், கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் செந் தூர்பாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் விஜய் செய்தியாளர்க ளுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட் டத்தில் கடந்த மாதம் 18-ஆம் தேதி கடைய நல்லூர் நகரசபை பகுதி யில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிய வந்தது. உடனடியாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தென்காசி, வடகரை, செங்கோட்டை, கடையம், பாப்பாக்குடி, பாவூர்சத்திரம், கீழப் பாவூர், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், வள் ளியூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் மற் றும் நெல்லை மாநகரப் பகுதிகளில் ஆங்காங்கே பரவி உள்ளது.

இதுவரை நோய் அறிகுறி காரணமாக ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதில் 638 பேருக்கு டெங்கு காய்ச் சல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த காய்ச்சலுக்கு இது வரை 17 பேர் உயிர் இழந்ததாக பதிவு செய் யப்பட்டு இருக்கிறது. தற்போது எடுக்கப்படும் தீவிர நடவடிக்கைகள் மூலம் காய்ச்சல் பாதிப்பு வேகமாக குறையத் தொடங்கி உள்ளது. இன்னும் ஒரு வாரத் துக்குள் டெங்கு காய்ச் சல் முழுமையாக கட் டுக்குள் வரும்.

-இவ்வாறு அமைச்சர் விஜய் கூறி னார்.

விருதுநகர் அருகே உள்ள வலுக்கலொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேலு. இவரது மகன் கமலக்கண்ணன் (8). இவனுக்கு கடந்த 14-ஆம் தேதி லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அவனது பெற்றோர் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். 2 நாட்கள் தீவிர சிகிச் சைக்குப் பின்னரும் நோய் பாதிப்பு குறைய வில்லை. அவனது உடல் நிலை மோசமாகவே மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு மருத்துவர்கள் அவனுக்கு ரத்தப் பரி சோதனை செய்ததில் அவனுக்கு டெங்கு காய்ச் சல் நோய் பாதிப்பு இருந் தது கண்டுபிடிக்கப்பட் டது.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனா லும் சிகிச்சை பலனின்றி சிறுவன் கமலக்கண்ணன் பரிதாபமாக இறந்தான்.

சென்னை, மே.18- உச்சநீதிமன்ற உத்தரவுப் படி சென்னையில் கார் கண்ணாடிகளில் கறுப்பு பிலிம் பயன்படுத்த காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் காவல் துறையினர் கார்களை சோதனை நடத்தி கண் ணாடிகளில் ஒட்டப்பட் டுள்ள கறுப்பு பிலிம் களை அகற்ற நடவ டிக்கை எடுத்து வரு கிறார்கள்.

கார்களில் முன்புறம், பின்புறம் மற்றும் ஜன் னல் கண்ணாடிகளில் கறுப்பு பிலிம் ஒட்டி சிலர் பயன்படுத்துகிறார் கள். வெயிலுக்கு இத மாக இருப்பதற்காகவும், காருக்குள் பயணம் செய்பவர்கள் வெளியில் தெரியாமல் இருப்பதற் காகவும், இந்த கறுப்பு பிலிம்களை கார் கண் ணாடிகளில் ஒட்டி பயன்படுத்துகிறார்கள்.

இவ்வாறு கார் கண் ணாடிகளில் கருப்பு பிலிம் ஒட்டி பயன்படுத் துவதற்கு உச்சநீதிமன்ற தடை விதித்து உத்தர விட்டது. மே மாதம் முதல் இந்தியா முழு வதும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் உச்சநீதிமன்ற ஆணை பிறப்பித்தது.

இதன்படி இந்தியாவில் பல மாநி லங்களில் கார் கண் ணாடிகளில் கறுப்பு பிலிம்கள் ஒட்ட தடை விதிக்கும் முறை அம லுக்கு வந்துவிட்டது. தமிழகத்திலும் சென் னையில் நேற்று முதல் இந்த திட்டத்தை காவல் துறையின் செயல்படுத்த தொடங்கிவிட்டனர்.

இந்த திட்டம் தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் இந்த தடை உத்தரவு அம லுக்கு வந்துவிட்டது. முதலில் 2 நாட்கள் கறுப்பு பிலிம் கண் ணாடி கார்களை மடக்கி, கறுப்பு பிலிம் களை அகற்றும்படி பிரச்சாரம் செய்யப்படும். அதன்பிறகு அபராதம் விதிக்கப்படும். முதல் தவறுக்கு ரூ.100-ம், அடுத்த தவறுக்கு ரூ.300 அபராதமாக விதிக்கப்படும்.

ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள முக்கியஸ்தர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அவர் கள் கறுப்பு பிலிம் ஒட் டப்பட்ட கண்ணாடி கார்களை பயன்படுத்த லாம். மேலும் காரின் கண்ணாடிகள் வழியாக 70 சதவீதம் உள்ளே இருப்பவர்களை பார்க் கும் விதத்தில் கறுப்பு பிலிம்களை ஒட்டிக் கொள்ளலாம். அதற்கு தடை இல்லை. இந்த புதிய திட்டத்துக்கு கார் பயனாளிகள் முழு ஒத் துழைப்பு தர வேண்டு கிறோம்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

சென்னை, மே 18-கணக்கு காட்டுவதற் காக, ரயில் பாதைகளை கடக்கும் பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்பிஎப்) ஒளிந்திருந்து பிடித்து அபராதம் விதிக்கின் றனர்.

ரயில்வேயில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற் றும் குற்ற வழக்குகளை விசாரிக்க அந்த மாநி லத்தை சேர்ந்த ரயில்வே காவல்துறையினர் ஈடு படுகின்றனர்.அதே நேரத்தில்ரயில்வே சொத்துக்களை பாது காக்கும் பணியில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஈடுபடுகின்றனர்.

கூடவே இவர்கள் ரயில்பா தையை கடப்பவர்கள், பயணிகளிடம் அத்து மீறுபவர்கள், ரயில்வே இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களை ரயில்வே விதிகளின்படி பிடித்து சென்னையில் ரயில்வே நீதிமன்றங்க ளிலும், மற்ற இடங் களில் வழக்கமான நீதி மன்றங்களிலும் ஆஜர் படுத்தி அபராதம் வசூ லிக்கின்றனர். ஒவ்வொரு ஆர்பிஎப் நிலையமும் மாதத்திற்கு இவ்வளவு வழக்கு பதிவு செய்ய வேண்டும், இவ்வளவு அபராதம் வசூலிக்க வேண்டும் என்று ரயில்வே இலக்கு நிர்ண யித்துள்ளது.

எனவே, ரயில்பா தையை யாராவது கடக் கிறார்கள் என்றால் ஆர்பிஎப் காவலர் தடுக்க மாட்டார்கள், அதற்காகவே காத்தி ருந்தது போல் ஓடிப் போய் பிடித்து அபரா தம்விதிக்கின்றனர். பேசின்பாலம் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்நிலையத்தின் முதலாவது நடைமேடை அருகே இருக்கும் வேலி யின் பின்புறம் ஒளிந்து கொள்கின்றனர்.

யாரா வது ரயில்பாதையை கடக்க முயன்றால் பாய்ந்து சென்று மடக்குகின் றனர். ஆர்பிஎப் ஒளிந்தி ருப்பதை யாராவது எச்சரித்தால், அவர்க ளையும் பிடித்து அபரா தம் விதிக்கின்றனர். இப்படி நேற்று காலை பேசின்பாலம் ரயில் நிலையதண்ட வாளத்தை கடந்த 45 பேரை ஆர்பிஎப் காவல் துறையினர் மறைந் திருந்து பிடித்தனர்.

பேசின்பாலம் உட் பட கும்மிடிபூண்டி, திருவள்ளூர், தாம்பரம், அரக்கோணம் மார்க் கங்களில் உள்ள புறநகர் ரயில் நிலையங்கள் எதி லும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் வந்து செல்ல வசதியான சாய்வுப் பாதை, பாலம் இல்லை. அதை சரி செய்யாத வரை ரயில்பாதையை கடப்பவர்கள் உயிரி ழப்பது தொடர்கதை யாகவே இருக்கும்.

சென்னை, மே 17-தமிழ்நாட்டில் உள்ள மொத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் 355 பேர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 170 பேர்தான் உள்ளனர். இதேபோல், 259 அய்.பி.எஸ். அதிகாரிகளில் 108 பேர்தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசின் நிருவாக சக்கரத்தை சுழற்றுவதில் பெரும் பங்கு அய்.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உள்ளது. ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய தேர்வாணையம் நடத்துகிறது. இதில் உயர் மதிப்பெண் பெறுபவர்கள் அய்.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், அடுத்த மதிப்பெண் பெறுபவர்கள் அய்.பி.எஸ். அதிகாரிகளாகவும் நியமனம் செய்யப்படுகின்றனர்.

மொத்தமாக தேர்வு செய்யப்படுபவர்களில் 3-ல் ஒரு பகுதி அய்.ஏ.எஸ். அதிகாரிகள் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம் பெறுகின்றனர். 3-இல் 2 பகுதியினர் அந்தந்த மண்டலம், அதாவது அண்டை மாநிலங்களில் விருப்ப தேர்வு அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்படுகின்றனர்.

சமீபத்தில் அகில இந்திய பணிகளுக்கான தேர்வு பெற்றோர் பட்டியலை மத்திய தேர்வாணையம் வெளியிட்டது. இதில், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற பணிகள் அடங்கும். 715 ஆண்களும், 195 பெண்களும் சேர்த்து மொத்தம் 910 பேர் தேர்வு பெற்றனர். தமிழ்நாட்டில் இருந்து 68 பேர்கள் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றிருப்பது பெரிய மனக்குறையாக உள்ளது.

இந்த ஆண்டு 8 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழ்நாட்டு பணிக்கு ஒதுக்கப்பட்டு, பயிற்சிக்காக சேர உள்ளனர். அதில், கோவை மாவட்ட உதவி ஆட்சியர் பயிற்சிக்கு சேர உள்ள எஸ்.திவ்யதர்ஷினி, மதுரை மாவட்ட உதவி ஆட்சியர் பயிற்சிக்கு சேர உள்ள எம்.அரவிந்த், ஈரோடு மாவட்ட உதவி ஆட்சியர் பயிற்சிக்கு சேர உள்ள கே.விஜய கார்த்திகேயன் ஆகியோர் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

நெல்லை மாவட்டத்தில் பயிற்சிக்கு சேர உள்ள சந்திரசேகர் சக்முரி, கடலூர் மாவட்டத்தில் பயிற்சிக்கு சேர உள்ள வி.ஜெயசந்திர பானு ரெட்டி, திருச்சி மாவட்டத்தில் பயிற்சிக்கு சேர உள்ள மந்திரி கோவிந்தராவ், வேலூர் மாவட்டத்தில் பயிற்சிக்கு சேர உள்ள பி.மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பயிற்சிக்கு சேர உள்ள எஸ்.அனீஷ்சேகர் கேரளாவை சேர்ந்தவர். ஆக, தமிழ்நாட்டில் இருந்து 3 பேர்தான் தமிழக அய்.ஏ.எஸ். பணிக்கு வருகிறார்கள். ஆனால், ஆந்திராவில் இருந்து 4 பேர் வருகின்றனர்.

இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் பணிபுரியும் 355 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 170 பேர் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அதிலும் நேரடியாக அய்.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள் 71 பேர்தான். மீதமுள்ள 99 பேர் தமிழக அரசு பணியில் இருந்து அகில இந்திய ஆட்சிப் பணிக்கு (அய்.ஏ.எஸ்.) உயர்வு பெற்றவர்கள்.

இதேபோல், தமிழகத்தில் மொத்தம் உள்ள 259 அய்.பி.எஸ். அதிகாரிகளில் நேரடியாக பணிக்கு வந்தவர்கள் 179 பேர். இதில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 108 பேர். அதிலும், மாநில காவல்துறை பணியில் சேர்ந்து அய்.பி.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றவர்கள் 80 பேர். அப்படிஎன்றால் தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக அய்.பி.எஸ். அதிகாரியாக வந்தவர்கள் 28 பேர்தான்.

ஆக, இனி அதிக அளவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அய்ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கு பல்கலைக்கழகங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். மத்திய அரசும் 3 இல் ஒரு பங்கு அய்.ஏ.எஸ். அதிகாரிகளை சொந்த மாநிலத்திற்கும், 2 பங்கு அதிகாரிகள் அண்டை மாநிலங்களுக்கும் நியமிப்பதை மாற்றி, 50 சதவிகிதம் பேர்களை சொந்த மாநிலங்களில் நியமிக்க வேண்டும். மீதமுள்ள 50 சதவிகிதம் பேர்களை அண்டை மாநிலங்களில் நியமிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த விகிதாச்சார அடிப்படையில்தான் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனங்கள் இருந்தன. பிறகுதான் நிலைமை மாறியது. ஆக, மாநில அரசுகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி குரல் கொடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

சேலம், மே 18-சேலம் மாவட்டத்தில் மட்டும் தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை 1007 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக சமூகநல அலுவலர் தெரிவித்தார்.

சேலம் மாவட்ட சமூகநலத் துறை சார்பில் நலத் திட்டங்கள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்து செயலாக்க அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் தலைமை வகித்து பேசியது:

தற்பொழுது பிறப்பிலேயே பெண் குழந்தைகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை மற்றும் குடும்ப வன்முறையைத் தடுக்க சமூகநலத் துறை திட்டங்கள் மற்றும் சட்டங்களைப் பயன்படுத்தி பெண்கள் தங்களது பிரச்சினைகளைத் தாண்டி வர வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

கூட்டத்தில் சமூகநலத் துறை அலுவலர் அன்பு பேசியதாவது:

சேலம் மாவட் டத்தில் 1992ஆம் ஆண்டு முதல் 1007 குழந்தை கள் தொட்டில் குழந்தை திட்டம் மூலம் காப்பாற்ற ப்பட்டுள்ளனர். இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், திருமண உதவி, விதவை மகள் திருமண உதவி மற்றும் கலப்புத் திருமண உதவி உள்ளிட்ட குழந்தைகள், பெண்கள், அரவாணிகள், முதியோர் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக சமூகநலத் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

குழந்தைத் திருமண தடுப்பு சட்டம் குறித்து வழக்குரைஞர் கவிதா, குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் குறித்து வழக்குரைஞர் கவுதம் பூபாலன், மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் குறித்து சிவகாமி ஆகியோர் பேசினர். சமூகநலத்துறை, காவல்துறையை சேர்ந்த பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்