Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

தமிழகம்

விருதுநகர், மே 18-விருதுநகர் மாவட்டத் திலும் டெங்கு காய்ச்சல் பரவியது. 8 வயது சிறு வன் டெங்கு காய்ச்ச லுக்கு பலியானான்.

நெல்லை மாவட்டத் தில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி இருக்கிறது.

டெங்கு காய்ச்சல் நோயை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்த ஆய்வு கூட்டம் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சாரல் அரங்கில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் டாக் டர் விஜய், கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் செந் தூர்பாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் விஜய் செய்தியாளர்க ளுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட் டத்தில் கடந்த மாதம் 18-ஆம் தேதி கடைய நல்லூர் நகரசபை பகுதி யில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிய வந்தது. உடனடியாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தென்காசி, வடகரை, செங்கோட்டை, கடையம், பாப்பாக்குடி, பாவூர்சத்திரம், கீழப் பாவூர், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், வள் ளியூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் மற் றும் நெல்லை மாநகரப் பகுதிகளில் ஆங்காங்கே பரவி உள்ளது.

இதுவரை நோய் அறிகுறி காரணமாக ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதில் 638 பேருக்கு டெங்கு காய்ச் சல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த காய்ச்சலுக்கு இது வரை 17 பேர் உயிர் இழந்ததாக பதிவு செய் யப்பட்டு இருக்கிறது. தற்போது எடுக்கப்படும் தீவிர நடவடிக்கைகள் மூலம் காய்ச்சல் பாதிப்பு வேகமாக குறையத் தொடங்கி உள்ளது. இன்னும் ஒரு வாரத் துக்குள் டெங்கு காய்ச் சல் முழுமையாக கட் டுக்குள் வரும்.

-இவ்வாறு அமைச்சர் விஜய் கூறி னார்.

விருதுநகர் அருகே உள்ள வலுக்கலொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேலு. இவரது மகன் கமலக்கண்ணன் (8). இவனுக்கு கடந்த 14-ஆம் தேதி லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அவனது பெற்றோர் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். 2 நாட்கள் தீவிர சிகிச் சைக்குப் பின்னரும் நோய் பாதிப்பு குறைய வில்லை. அவனது உடல் நிலை மோசமாகவே மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு மருத்துவர்கள் அவனுக்கு ரத்தப் பரி சோதனை செய்ததில் அவனுக்கு டெங்கு காய்ச் சல் நோய் பாதிப்பு இருந் தது கண்டுபிடிக்கப்பட் டது.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனா லும் சிகிச்சை பலனின்றி சிறுவன் கமலக்கண்ணன் பரிதாபமாக இறந்தான்.

சென்னை, மே 18-கணக்கு காட்டுவதற் காக, ரயில் பாதைகளை கடக்கும் பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்பிஎப்) ஒளிந்திருந்து பிடித்து அபராதம் விதிக்கின் றனர்.

ரயில்வேயில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற் றும் குற்ற வழக்குகளை விசாரிக்க அந்த மாநி லத்தை சேர்ந்த ரயில்வே காவல்துறையினர் ஈடு படுகின்றனர்.அதே நேரத்தில்ரயில்வே சொத்துக்களை பாது காக்கும் பணியில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஈடுபடுகின்றனர்.

கூடவே இவர்கள் ரயில்பா தையை கடப்பவர்கள், பயணிகளிடம் அத்து மீறுபவர்கள், ரயில்வே இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களை ரயில்வே விதிகளின்படி பிடித்து சென்னையில் ரயில்வே நீதிமன்றங்க ளிலும், மற்ற இடங் களில் வழக்கமான நீதி மன்றங்களிலும் ஆஜர் படுத்தி அபராதம் வசூ லிக்கின்றனர். ஒவ்வொரு ஆர்பிஎப் நிலையமும் மாதத்திற்கு இவ்வளவு வழக்கு பதிவு செய்ய வேண்டும், இவ்வளவு அபராதம் வசூலிக்க வேண்டும் என்று ரயில்வே இலக்கு நிர்ண யித்துள்ளது.

எனவே, ரயில்பா தையை யாராவது கடக் கிறார்கள் என்றால் ஆர்பிஎப் காவலர் தடுக்க மாட்டார்கள், அதற்காகவே காத்தி ருந்தது போல் ஓடிப் போய் பிடித்து அபரா தம்விதிக்கின்றனர். பேசின்பாலம் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்நிலையத்தின் முதலாவது நடைமேடை அருகே இருக்கும் வேலி யின் பின்புறம் ஒளிந்து கொள்கின்றனர்.

யாரா வது ரயில்பாதையை கடக்க முயன்றால் பாய்ந்து சென்று மடக்குகின் றனர். ஆர்பிஎப் ஒளிந்தி ருப்பதை யாராவது எச்சரித்தால், அவர்க ளையும் பிடித்து அபரா தம் விதிக்கின்றனர். இப்படி நேற்று காலை பேசின்பாலம் ரயில் நிலையதண்ட வாளத்தை கடந்த 45 பேரை ஆர்பிஎப் காவல் துறையினர் மறைந் திருந்து பிடித்தனர்.

பேசின்பாலம் உட் பட கும்மிடிபூண்டி, திருவள்ளூர், தாம்பரம், அரக்கோணம் மார்க் கங்களில் உள்ள புறநகர் ரயில் நிலையங்கள் எதி லும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் வந்து செல்ல வசதியான சாய்வுப் பாதை, பாலம் இல்லை. அதை சரி செய்யாத வரை ரயில்பாதையை கடப்பவர்கள் உயிரி ழப்பது தொடர்கதை யாகவே இருக்கும்.

சென்னை, மே 18- `பொறியியல் மாணவர் சேர்க்கையில் போலி மதிப்பெண் பட்டியல் கொடுத்து சேர்வதை தடுக்க புதிய நடைமுறை கடைப் பிடிக்கப்பட உள்ளது'என்று அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள 3 கல்லூரிகள், குரோம் பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக எம்.அய்.டி. கல் லூரி, பல்வேறு மாவட் டங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி கள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்பட மொத்தம் 554 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரி களில் பி.இ. சேர்வதற்கு 2 லட்சத்திற்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 65 சதவீதம் ஆகும்.

அரசு இட ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் கள் சேர்வதற்கு வருடந் தோறும் அண்ணா பல் கலைக் கழகம் கலந் தாய்வு நடத்துகிறது. கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழக மாண வர் சேர்க்கை செய லாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரராஜ் தலைமையிலான குழுவி னர் நடத்தி வருகிறார் கள்.

இந்த வருடம் கலந் தாய்வை ஜூலை 9-ஆம் தேதி தொடங்குகிறது. ஒருமாதம் கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய் வில் கலந்து கொள்வ தற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 11-ஆம் தேதி முதல் அண்ணா பல்கலைக்கழ கம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 58 இடங்க ளில் காலை 9-30 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கப்பட்டு வருகின்றது.இது குறித்து அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

பொறியியல் கலந் தாய்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க விண்ணப் பங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 2 லட்சம் விண்ணப்ப படி வங்கள் அச்சடிக்கப்பட் டன.

17-ஆம் தேதி மாலை வரை 1 லட்சத்து 84 ஆயிரத்து 412 விண் ணப்பங்கள் விற்பனை யாகி உள்ளன. விண்ணப் பங்கள் மே 31-ஆம் தேதி வரை வழங்கப் படும். அன்றுதான் பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப் பங் களை சமர்ப்பிக்கவும் கடைசி நாள்.

2 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பம் விற்ப னையாக வாய்ப்பு உள் ளது. அதனால் மேலும் 20 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப் பட்டு வருகிறது.

மாணவ-மாணவிகள் இப்போதே விண்ணப் பங்களை தவறு இல்லா மல் நிரப்பி தேவையான சான்றிதழ்களை பெற்று வைத்திருப்பது நல்லது. பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் தவிர அனைத்து சான்றிதழ் களும் தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது.

கடந்த சில வரு டங்களுக்கு முன்பு பிளஸ்-2 முடித்த மாண வர்கள் சிலர் போலி மதிப்பெண் பட்டியலை கொடுத்து பொறியியல் சேர முயற்சி செய்தனர். ஆனால் அது கண்டு பிடிக்கப்பட்டது.

எனவே இந்த வரு டமும் போலி மார்க் பட்டியல் கொடுத்து மாணவர்கள் சேராமல் இருக்க புதிய நடை முறை கடைப்பிடிக்கப் பட உள்ளது. அதாவது மாணவர்கள் சமர்ப் பித்த மதிப்பெண் பட்டி யலையும் அரசு தேர்வு கள் துறை அனுப்பிய சி.டி.யில் உள்ள மதிப் பெண்ணையும் ஒப் பிட்டு பார்ப்போம். அதில் குளறுபடி இருந் தால் போலி மதிப்பெண் பட்டியல்உடனே தெரிந்துவிடும். உடனே தக்கநடவடிக்கை எடுக்கப்படும்.

-இவ்வாறு மன்னர் ஜவகர் தெரிவித்தார்.

சென்னை, மே 18-ரயில்வே டிக்கெட் பரி சோதகர் தேர்வும், ஆசிரி யர் தேர்வு வாரியத்தின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வும் ஒரே நாளில் (27-ஆம் தேதி) நடத்தப்படுவதால், இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்த மாண வர்கள் எதை எழுதுவது? எதை விட்டு விடுவது? என்ற குழப்பத்தில் ஆழ்ந் துள்ளனர்.

தெற்கு ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் கள் தேர்ந்தெடுப்பதற் கான போட்டித்தேர்வு 27-ஆம் தேதி (ஞாயிற் றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதேநாளில் 2995 முதுநிலை பட்ட தாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியமும் போட் டித்தேர்வை நடத்து கிறது. கணிசமான மாண வர்கள் இரண்டு தேர்வு களுக்கும் விண்ணப் பித்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் (டி.என்.பி. எஸ்.சி.) என்றாலும் சரி, ஆசிரியர்களை தேர்வு செய்யும் ஆசிரியர் தேர்வு வாரியம் என்றா லும் சரி ஒரு போட்டித் தேர்வுக்கு நாள் முடிவு செய்யும் போது அந்த தினத்தில் மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வோ, ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வோ, ரயில்வே போட்டித் தேர்வோ நடத்தப்பட உள்ளதா? என்பது பார்த்துத் தான் முடிவு செய்வார்கள்.

ஆனால், இந்தமுறை என்ன காரணத்தினாலோ அல்லது கவனிக்காமல் விட்டு விட்டார்களோ தெரியவில்லை டிக்கெட் பரிசோதகர் தேர்வு நடைபெறும் மே 27-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று ஆசிரி யர் தேர்வு வாரியத்தின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வும் நடத் தப்பட உள்ளது.

ரயில்வே தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வு ஆகும். எனவே, ரயில்வே நிர்வாகம் டிக் கெட் பரிசோதகர் தேர்வு தேதியை மாற்றி அமைப்பது என்பது கடினம். ஆனால், ஆசிரி யர் தேர்வு வாரியத்தின் தேர்வு தமிழ்நாட்டில் மட்டும் நடத்தப்படுகிற தேர்வு.

எனவே, தேர்வு தேதியை வேறொரு தேதிக்கு தள்ளிவைப் பதில் சிரமம் இருக்காது. இரண்டு தேர்வுக ளையும் எழுத வசதியாக ஆசிரியர் தேர்வு வாரி யம் முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் தேர்வை ஒரு வாரமோ அல்லது 2 வாரமோ கழித்து வசதிப் படி வேறொரு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவ-மாண விகள் எதிர்பார்க்கிறார் கள்.

சென்னை,மே.18- அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி. பி.எஸ். சேருகின்ற எஸ்.சி., எஸ்.டி. மாணவ- மாணவிகளின் பெற்றோ ரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத் திற்கு குறைவாக இருந்தால் அந்த மாணவர்கள் இலவசமாக படிக்கலாம்.

அதாவது அவர்கள் மாணவர் சேர்க்கையின்போது பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழை சமர்ப்பித்தால் கல்வி கட்டணம், சேர்க்கை கட்டணம், விளையாட்டு கட்டணம், நூலக கட்டணம் முதலிய கட்டணங்களில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவார்கள். இது பல மாணவர்களுக்கு தெரியாமல் உள்ளது. இந்த தகவலை கல்வியாளர் பேராசிரியர் மூர்த்தி செல்வக்குமரன் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்