
விருதுநகர், மே 18-விருதுநகர் மாவட்டத் திலும் டெங்கு காய்ச்சல் பரவியது. 8 வயது சிறு வன் டெங்கு காய்ச்ச லுக்கு பலியானான்.
நெல்லை மாவட்டத் தில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி இருக்கிறது.
டெங்கு காய்ச்சல் நோயை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்த ஆய்வு கூட்டம் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சாரல் அரங்கில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் டாக் டர் விஜய், கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் செந் தூர்பாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் விஜய் செய்தியாளர்க ளுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட் டத்தில் கடந்த மாதம் 18-ஆம் தேதி கடைய நல்லூர் நகரசபை பகுதி யில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிய வந்தது. உடனடியாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தென்காசி, வடகரை, செங்கோட்டை, கடையம், பாப்பாக்குடி, பாவூர்சத்திரம், கீழப் பாவூர், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், வள் ளியூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் மற் றும் நெல்லை மாநகரப் பகுதிகளில் ஆங்காங்கே பரவி உள்ளது.
இதுவரை நோய் அறிகுறி காரணமாக ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதில் 638 பேருக்கு டெங்கு காய்ச் சல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த காய்ச்சலுக்கு இது வரை 17 பேர் உயிர் இழந்ததாக பதிவு செய் யப்பட்டு இருக்கிறது. தற்போது எடுக்கப்படும் தீவிர நடவடிக்கைகள் மூலம் காய்ச்சல் பாதிப்பு வேகமாக குறையத் தொடங்கி உள்ளது. இன்னும் ஒரு வாரத் துக்குள் டெங்கு காய்ச் சல் முழுமையாக கட் டுக்குள் வரும்.
-இவ்வாறு அமைச்சர் விஜய் கூறி னார்.
விருதுநகர் அருகே உள்ள வலுக்கலொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேலு. இவரது மகன் கமலக்கண்ணன் (8). இவனுக்கு கடந்த 14-ஆம் தேதி லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அவனது பெற்றோர் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். 2 நாட்கள் தீவிர சிகிச் சைக்குப் பின்னரும் நோய் பாதிப்பு குறைய வில்லை. அவனது உடல் நிலை மோசமாகவே மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு மருத்துவர்கள் அவனுக்கு ரத்தப் பரி சோதனை செய்ததில் அவனுக்கு டெங்கு காய்ச் சல் நோய் பாதிப்பு இருந் தது கண்டுபிடிக்கப்பட் டது.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனா லும் சிகிச்சை பலனின்றி சிறுவன் கமலக்கண்ணன் பரிதாபமாக இறந்தான்.