Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப். 22- பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித் தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, தகுதித் தேர்வு நடத்தும் நாள் குறித்து விரைவில் அறி விப்பு வெளியாகும்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர்கள், பட் டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின்போது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனங்கள் வழங்கப் பட்டு வந்தன. இந்நிலை யில், புதியதாக ஆட் சிக்கு வந்துள்ள அ.தி.மு.க. அரசு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை காரணம் காட்டி, ஆசிரி யர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப் போவதாக அறி வித்தது.

இதுகுறித்து, சட்டப் பேரவையில் முதல்வர் பேசுகையில், இந்த ஆண்டு 50,000 ஆசிரியர் கள் நியமிக்கப் போவதாக அறிவித்தார். 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடை நிலை ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்ட தாரி ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும் இந்த தகுதித் தேர்வுகள் நடக்க உள்ளது. இந்த தேர்வை எப்படி நடத்துவது என் பதில் இதுவரை குழப் பம் நீடித்து வந்தது. இந் நிலையில், இப்போது தகுதித் தேர்வு நடத்துவ தற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து, தகுதித் தேர்வு குறித்த முழு விவரம் அரசு கெசட்டில் வெளியிட உள்ளனர்.

இதன்படி தமிழ், ஆங்கிலம், சுற்றுச்சூழல், குழந்தைகள் மேம்பாடு ஆகியவை பொதுவாக வைக்கப்படுகிறது. இவற்றில் இருந்து இடம் பெறும் கேள்விகளுக்கு எல்லோரும் விடை அளிக் கவும், பின்னர் பாடங் களுக்கு ஏற்ப தனித்தனி யாக விடை அளிக்கும் வகையிலும், தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை தெரிவித்தது. ஆனால், என்.சி.இ.ஆர்.டி. நடத் தும் தேர்வு விதிகளை அடிப்படையாக கொண்டே தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

எனவே, என்.சி.இ. ஆர்.டி. நடத்தும் தேர்வு போலவே ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்த உள்ளது. ஆனால், ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி யாக கேள்விகள் அமை யாமல் 3 பிரிவுகளில் பாடங்களை பிரித்து அதற்குரிய கேள்விகள் இடம் பெற உள்ளன. அதனால் வரலாறு, புவி யியல் பாடங்களை படித் தவர்களும் கணக்கு, அறி வியல் பாட கேள்வி களுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற் படலாம்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்