Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

தமிழகம்

சென்னை, மே.18- உச்சநீதிமன்ற உத்தரவுப் படி சென்னையில் கார் கண்ணாடிகளில் கறுப்பு பிலிம் பயன்படுத்த காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் காவல் துறையினர் கார்களை சோதனை நடத்தி கண் ணாடிகளில் ஒட்டப்பட் டுள்ள கறுப்பு பிலிம் களை அகற்ற நடவ டிக்கை எடுத்து வரு கிறார்கள்.

கார்களில் முன்புறம், பின்புறம் மற்றும் ஜன் னல் கண்ணாடிகளில் கறுப்பு பிலிம் ஒட்டி சிலர் பயன்படுத்துகிறார் கள். வெயிலுக்கு இத மாக இருப்பதற்காகவும், காருக்குள் பயணம் செய்பவர்கள் வெளியில் தெரியாமல் இருப்பதற் காகவும், இந்த கறுப்பு பிலிம்களை கார் கண் ணாடிகளில் ஒட்டி பயன்படுத்துகிறார்கள்.

இவ்வாறு கார் கண் ணாடிகளில் கருப்பு பிலிம் ஒட்டி பயன்படுத் துவதற்கு உச்சநீதிமன்ற தடை விதித்து உத்தர விட்டது. மே மாதம் முதல் இந்தியா முழு வதும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் உச்சநீதிமன்ற ஆணை பிறப்பித்தது.

இதன்படி இந்தியாவில் பல மாநி லங்களில் கார் கண் ணாடிகளில் கறுப்பு பிலிம்கள் ஒட்ட தடை விதிக்கும் முறை அம லுக்கு வந்துவிட்டது. தமிழகத்திலும் சென் னையில் நேற்று முதல் இந்த திட்டத்தை காவல் துறையின் செயல்படுத்த தொடங்கிவிட்டனர்.

இந்த திட்டம் தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் இந்த தடை உத்தரவு அம லுக்கு வந்துவிட்டது. முதலில் 2 நாட்கள் கறுப்பு பிலிம் கண் ணாடி கார்களை மடக்கி, கறுப்பு பிலிம் களை அகற்றும்படி பிரச்சாரம் செய்யப்படும். அதன்பிறகு அபராதம் விதிக்கப்படும். முதல் தவறுக்கு ரூ.100-ம், அடுத்த தவறுக்கு ரூ.300 அபராதமாக விதிக்கப்படும்.

ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள முக்கியஸ்தர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அவர் கள் கறுப்பு பிலிம் ஒட் டப்பட்ட கண்ணாடி கார்களை பயன்படுத்த லாம். மேலும் காரின் கண்ணாடிகள் வழியாக 70 சதவீதம் உள்ளே இருப்பவர்களை பார்க் கும் விதத்தில் கறுப்பு பிலிம்களை ஒட்டிக் கொள்ளலாம். அதற்கு தடை இல்லை. இந்த புதிய திட்டத்துக்கு கார் பயனாளிகள் முழு ஒத் துழைப்பு தர வேண்டு கிறோம்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

சேலம், மே 18-சேலம் மாவட்டத்தில் மட்டும் தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை 1007 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக சமூகநல அலுவலர் தெரிவித்தார்.

சேலம் மாவட்ட சமூகநலத் துறை சார்பில் நலத் திட்டங்கள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்து செயலாக்க அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் தலைமை வகித்து பேசியது:

தற்பொழுது பிறப்பிலேயே பெண் குழந்தைகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை மற்றும் குடும்ப வன்முறையைத் தடுக்க சமூகநலத் துறை திட்டங்கள் மற்றும் சட்டங்களைப் பயன்படுத்தி பெண்கள் தங்களது பிரச்சினைகளைத் தாண்டி வர வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

கூட்டத்தில் சமூகநலத் துறை அலுவலர் அன்பு பேசியதாவது:

சேலம் மாவட் டத்தில் 1992ஆம் ஆண்டு முதல் 1007 குழந்தை கள் தொட்டில் குழந்தை திட்டம் மூலம் காப்பாற்ற ப்பட்டுள்ளனர். இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், திருமண உதவி, விதவை மகள் திருமண உதவி மற்றும் கலப்புத் திருமண உதவி உள்ளிட்ட குழந்தைகள், பெண்கள், அரவாணிகள், முதியோர் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக சமூகநலத் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

குழந்தைத் திருமண தடுப்பு சட்டம் குறித்து வழக்குரைஞர் கவிதா, குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் குறித்து வழக்குரைஞர் கவுதம் பூபாலன், மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் குறித்து சிவகாமி ஆகியோர் பேசினர். சமூகநலத்துறை, காவல்துறையை சேர்ந்த பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.

சென்னை, மே 18- ``சட்டவிரோமாக மணல் கடத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களை இந்த அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும்'' என்று, முதலமைச்சர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.

இது குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அளவற்ற முறையில் மணல் எடுப்பதைத் தடுக்கும் வகையிலும், நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி, நியாயமான விலையில், முறையாக மணல் கிடைக்க வழிவகை செய்யும் வகையிலும், மாநில அரசின் வருவாயைப் பெருக்கும் வகையிலும், அரசே மணலை எடுத்து விற்பனை செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.

இதன் காரணமாக பொது மக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைத்து வந்ததுடன் நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படும் வகையில் மணல் அள்ளும் பணி முறைப்படுத்தப்பட்டது.

2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, வரைமுறையின்றி மணல் அள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஆற்றுப் படுகைகள் அனைத்தும் பாழ்படுத்தப்பட்டன. தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ளக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு தாமிரபரணி ஆற்றுப் படுகை சேதமடைந்து இருந்தது.

நான் மீண்டும் மூன்றாவது முறையாக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மணல் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டேன்.

எனது உத்தரவையடுத்து, வருவாய் துறையும், காவல் துறையும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆற்றுப்படுகைகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு, மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த ஓராண்டு காலத்தில், மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது 4,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகளில் தொடர்புடைய 5,033 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5,501 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

இதுவரை 12 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 கோடி ரூபாய் அளவுக்கு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவது மற்றும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது ஆகியவை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

முந்தைய தி.மு.க. அரசின் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 603 கோடி ரூபாயாக, அதாவது சராசரியாக ஆண்டொன்றிற்கு 120 கோடி ரூபாயாக இருந்த மணல் வருவாய், கடந்த ஓராண்டில், தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்காத சூழ்நிலையிலும், 197 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதிலிருந்தே மணல் கொள்ளை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். இருப்பினும், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அள்ளுவது தொடர்வதாகவும், அதைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

உதாரணமாக, 12.5.2012 அன்று திருப்பத்தூர் வட்டம், பணியாண்ட பள்ளி, மதுரா ஜெயபுரம் கிராமத்தில் மணல் கடத்தப்படுவதாக, கிராமத்திலிருந்து திருப்பத்தூர் சார் ஆட்சியருக்கு தொலைபேசி செய்தி வரப் பெற்றது. இதைத் தடுத்து நிறுத்தும் வண்ணம், கிராம உதவியாளர் ராஜேந்திரன் அங்கே அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம உதவியாளர் பிற்பகல் 3.30 மணியளவில் அந்தக் கிராமத்தில் உள்ள வாரி புறம்போக்கில் அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த டிராக்டர் வாகனத்தை தடுத்து நிறுத்திய போது, மணல் ஏற்றிக் கொண்டிருந்த மூன்று நபர்கள் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பியோட முயற்சித்து இருக்கிறார்கள்.

இதனைத் தடுத்து நிறுத்திய போது,

வாகன உரிமையாளர் திருப்பதி மற்றும் அய்ந்து நபர்கள் கிராம உதவியாளர் ராஜேந்திரனை ஜாதியின் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி, கடுமையாக தாக்கி, அவரை இழுத்துச் சென்று வாரிக் கரையின் மேடான பகுதியில் கழுத்தை நெறித்து கொல்ல முயன்றுள்ளனர். மேலும், அவ்விடத்தில் குழி பறித்து அவரை புதைக்கவும் முயன்றுள்ளனர்

அப்போது, ராஜேந்திரன் தன் உயிரைக் காப்பாற்ற முயற்சித்த போது, அப்பகுதியில் குப்பைக் கொட்டுவதற்காக வந்த 12 வயது சிறுமி இதனை நேரடியாகப் பார்த்து, பயந்து உரத்தக் குரலில் கத்தியுள்ளார். இதனால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.

இதனைக் கண்ட மணல் கடத்தல்காரர்கள், டிராக்டரில் இருந்த மணலை அங்கே கொட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அம்மணாங்கோயில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மணல் கடத்தல்காரர்கள் கொண்டு வந்திருந்த இரண்டு சக்கர வாகனத்தை கைப்பற்றி, கந்திலி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக, கந்திலி காவல் நிலையத்தில், திருப்பதி மற்றும் அய்ந்து நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேகர் என்பவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி மற்றும் கோவிந்தராஜன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

இவர்களை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்.

மக்களின் குடிநீர்த் தேவைக்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக விளங்கும் இயற்கையின் வரப்பிரசாதமான ஆற்றுப் படுகைகளை சமூக விரோதிகள் தங்கள் சுய லாபத்திற்காக சேதப்படுத்துவதை எனது தலைமையிலான அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்பதையும், சட்டவிரோதமாக மணல் கடத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கையில் கூறி உள்ளார்.

சென்னை, மே.18- ``தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஆந்திரா அரசு இந்த மாத இறுதியில், கிருஷ்ணா நீரை திறந்துவிடுகிறது'' என்று, பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மக்களின் தாகம் தீர்ப்பதற்கு பூண்டி, புழல் ஏரிகளில் தண்ணீர் இருந்த போதிலும், கோடை காலத்தை சமாளிப்பதற்கு கிருஷ்ணா நீர் தேவையாக உள்ளது.

இதைக்கருத்தில் கொண்டு, தமிழ் நாடு பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர், ஆந்திரா அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்பாசனத் துறையின் உயர் பொறுப்பில் உள்ள பொறியாளர்களை சந்தித்துப் பேசினார்.

``தமிழகத்தில், குறிப்பாக சென் னையில் கோடை வெயில் மக்களை வாட்டிஎடுக்கிறது. கத்திரிவெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. பூண்டி, புழல் ஏரிகளில் தண்ணீர் அளவு குறைந்துவருகிறது. இதைக்கவனத்தில் கொண்டு, உடனடியாக கிருஷ்ணா நீரை திறந்து விடவேண்டும்'' என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, ``இந்த மாத இறுதியில், கிருஷ்ணா நீர் திறந்துவிடப்படும் என்றும், இதற்காக கால்வாய் சீரமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றும் ஆந்திரா அரசின் உயர் பொறுப்பில் உள்ள பொறியாளர்கள் உறுதி அளித்துள் ளனர்.

பாலாறு வடிநீர் திட்ட தலைமைபொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் வரதா பாளையம் சென்று ஆய்வு செய்துள் ளனர். இதற்கிடையே தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் வரக்கூடிய பகுதியை ஆந்திரா முதல் அமைச்சர் பார்வை யிட்டுச் சென்றுள்ளார்'' என்பதும், தமிழகத்துக்கு சாதகமாக உள்ளது என்றும் இரு மாநில உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணா நீர் திட்டத்தின்கீழ் பூண்டி ஏரியின் கொள்ளளவு அதிகரிக் கப்பட்டுள்ளது. தற்போது 5.5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் சென்னை நகருக்கு சராசரியாக ஒரு மாதத்துக்கு 1 டி.எம்.சி. வீதம் 5 மாதத்துக்கு தண்ணீர் இருப்பு உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித் தனர்.

சென்னை, மே 17.- பட்ஜெட் மார்ச் 26ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 32 நாட்கள் நடந்த இக் கூட்டத் தொடரில் 54 துறை களுக்கான மானிய கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டன. சபையின் முன்னவரும் நிதி அமைச்சருமான ஓ.பன் னீர்செல்வம் சபையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீர்மா னத்தை நேற்று முன் மொழிந்தார். இத்தீர்மா னம் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, மறுதேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜெயக் குமார் அறிவித்தார்.

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்