Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

தமிழகம்

சென்னை, மே 18- சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டு வளர்ப்புத்துறையை சேர்ந்த இளநிலை ஆய்வாளர்கள் ஆர்.மோகன்ராம் உட்பட சுமார் 100 அலுவலர்கள் மனு தாக்கல் செய்தனர்.

அதில், பட்டு வளர்ப்புத்துறையில் ஆபரேட்டர் பணியில் சேர்ந்த எங்களுக்கு பின்னர் இளநிலை ஆய்வாளர் என்ற பணி வழங்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அதே பணியில் இருந்த பலருக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை பணியாளர்கள் என தகுதி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

எனவே எங்களுக்கும் தகுதி உயர்வு வழங்கக்கோரி வேண்டும் என்று கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். ஆனால் எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

எனவே, எங்கள் கோரிக்கையை ஏற்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். ஒரேவிதமான பணியில் இருந்த மற்றவர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை தகுதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே மனுதாரர்களுக்கும் அந்தத் தகுதிகளைப் பெற சட்டப்படி முழு உரிமை உண்டு.

எனவே மனுதாரர்களுக்கும் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை தகுதிகளை வழங்கி, பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை, மே 17-தமிழ்நாட்டில் உள்ள மொத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் 355 பேர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 170 பேர்தான் உள்ளனர். இதேபோல், 259 அய்.பி.எஸ். அதிகாரிகளில் 108 பேர்தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசின் நிருவாக சக்கரத்தை சுழற்றுவதில் பெரும் பங்கு அய்.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உள்ளது. ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய தேர்வாணையம் நடத்துகிறது. இதில் உயர் மதிப்பெண் பெறுபவர்கள் அய்.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், அடுத்த மதிப்பெண் பெறுபவர்கள் அய்.பி.எஸ். அதிகாரிகளாகவும் நியமனம் செய்யப்படுகின்றனர்.

மொத்தமாக தேர்வு செய்யப்படுபவர்களில் 3-ல் ஒரு பகுதி அய்.ஏ.எஸ். அதிகாரிகள் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம் பெறுகின்றனர். 3-இல் 2 பகுதியினர் அந்தந்த மண்டலம், அதாவது அண்டை மாநிலங்களில் விருப்ப தேர்வு அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்படுகின்றனர்.

சமீபத்தில் அகில இந்திய பணிகளுக்கான தேர்வு பெற்றோர் பட்டியலை மத்திய தேர்வாணையம் வெளியிட்டது. இதில், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற பணிகள் அடங்கும். 715 ஆண்களும், 195 பெண்களும் சேர்த்து மொத்தம் 910 பேர் தேர்வு பெற்றனர். தமிழ்நாட்டில் இருந்து 68 பேர்கள் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றிருப்பது பெரிய மனக்குறையாக உள்ளது.

இந்த ஆண்டு 8 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழ்நாட்டு பணிக்கு ஒதுக்கப்பட்டு, பயிற்சிக்காக சேர உள்ளனர். அதில், கோவை மாவட்ட உதவி ஆட்சியர் பயிற்சிக்கு சேர உள்ள எஸ்.திவ்யதர்ஷினி, மதுரை மாவட்ட உதவி ஆட்சியர் பயிற்சிக்கு சேர உள்ள எம்.அரவிந்த், ஈரோடு மாவட்ட உதவி ஆட்சியர் பயிற்சிக்கு சேர உள்ள கே.விஜய கார்த்திகேயன் ஆகியோர் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

நெல்லை மாவட்டத்தில் பயிற்சிக்கு சேர உள்ள சந்திரசேகர் சக்முரி, கடலூர் மாவட்டத்தில் பயிற்சிக்கு சேர உள்ள வி.ஜெயசந்திர பானு ரெட்டி, திருச்சி மாவட்டத்தில் பயிற்சிக்கு சேர உள்ள மந்திரி கோவிந்தராவ், வேலூர் மாவட்டத்தில் பயிற்சிக்கு சேர உள்ள பி.மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பயிற்சிக்கு சேர உள்ள எஸ்.அனீஷ்சேகர் கேரளாவை சேர்ந்தவர். ஆக, தமிழ்நாட்டில் இருந்து 3 பேர்தான் தமிழக அய்.ஏ.எஸ். பணிக்கு வருகிறார்கள். ஆனால், ஆந்திராவில் இருந்து 4 பேர் வருகின்றனர்.

இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் பணிபுரியும் 355 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 170 பேர் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அதிலும் நேரடியாக அய்.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள் 71 பேர்தான். மீதமுள்ள 99 பேர் தமிழக அரசு பணியில் இருந்து அகில இந்திய ஆட்சிப் பணிக்கு (அய்.ஏ.எஸ்.) உயர்வு பெற்றவர்கள்.

இதேபோல், தமிழகத்தில் மொத்தம் உள்ள 259 அய்.பி.எஸ். அதிகாரிகளில் நேரடியாக பணிக்கு வந்தவர்கள் 179 பேர். இதில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 108 பேர். அதிலும், மாநில காவல்துறை பணியில் சேர்ந்து அய்.பி.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றவர்கள் 80 பேர். அப்படிஎன்றால் தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக அய்.பி.எஸ். அதிகாரியாக வந்தவர்கள் 28 பேர்தான்.

ஆக, இனி அதிக அளவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அய்ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கு பல்கலைக்கழகங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். மத்திய அரசும் 3 இல் ஒரு பங்கு அய்.ஏ.எஸ். அதிகாரிகளை சொந்த மாநிலத்திற்கும், 2 பங்கு அதிகாரிகள் அண்டை மாநிலங்களுக்கும் நியமிப்பதை மாற்றி, 50 சதவிகிதம் பேர்களை சொந்த மாநிலங்களில் நியமிக்க வேண்டும். மீதமுள்ள 50 சதவிகிதம் பேர்களை அண்டை மாநிலங்களில் நியமிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த விகிதாச்சார அடிப்படையில்தான் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனங்கள் இருந்தன. பிறகுதான் நிலைமை மாறியது. ஆக, மாநில அரசுகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி குரல் கொடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

சுப. வீரபாண்டியன் எழுதிய திராவிடத்தால் எழுந்தோம், குறள் வானம், கவிதா, வந்ததும் வாழ்வதும், பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் ஆகிய அய்ந்து நூல்களை தமிழர் தலைவர் கி. வீரமணி  முன்னிலையில், தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட, மத்திய இணை அமைச்சர் சா. ஜெகத்ரட்சகன் பெற்றுக்கொண்டார். (சென்னை, 15.5.2012).

 

சென்னை, மே 16- பேராசிரியர் சுப. வீர பாண்டியன் எழுதிய அய்ந்து நூல்களை, தமி ழர் தலைவர் முன்னிலை யில் நடைபெற்ற விழா வில் தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் எழுதி யுள்ள திராவிடத்தால் எழுந்தோம், குறள் வானம், கவிதா, வந்ததும் வாழ்வதும், பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் ஆகிய அய்ந்து நூல்களின் வெளியீட்டு விழா நேற்று (15.5.2012) மாலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங் கில் சிறப்பாக நடை பெற்றது.

கலைஞருக்கு நினைவுப் பரிசு

இந்நூல்கள் வெளி யீட்டு விழாவிற்கு வந் திருந்தவர்களை வான வில் புத்தகாலயத்தின் உரிமையாளர் சுப. புக ழேந்தி வரவேற்றுப் பேசி னார். விழாவிற்கு தலைமையேற்று நூல் வெளியிட வந்திருந்த கலைஞருக்கு திருமதி. வசந்தா சுப. வீரபாண் டியன் நினைவுப் பரிசு வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்கள்

விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் திராவிடர் கழகத் தலை வர் கி. வீரமணி, மத்திய இணை அமைச்சர் சா. ஜெகத்ரட்சகன், முன் னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், பேராசிரியர் அப்துல் காதர், கவிப்பேரரசு வைர முத்து ஆகியோருக்கு பேராசிரியர் சுப. வீர பாண்டியன் சால்வை அணிவித்து புத்தகங் களை வழங்கி சிறப்பித் தார்.

நூல்கள் வெளியீடு

இதையடுத்து திராவி டர் கழகத் தலைவரும், தமிழர் தலைவருமான மானமிகு கி. வீரமணி அவர்களின் முன்னிலை யில், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் எழுதிய அய்ந்து நூல்களை, விழாவிற்குத் தலைமை வகித்த திராவிட முன் னேற்ற கழகத் தலை வரும், முன்னாள் முத லமைச்சருமான கலை ஞர் அவர்கள் நூல்களை வெளியிட்டார்.

கலைஞர் வெளி யிட்ட நூல்களை மத்திய செய்தி மற்றும் ஒலி- ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் சா. ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

பேராசிரியர் அப்துல் காதர், முன்னாள் துணை வேந்தர் அவ்வை நட ராசன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

தமிழர் தலைவர் கி. வீரமணி

இந்நூல்கள் வெளி யீட்டு விழாவின் முன் னிலை உரையை தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் நிகழ்த்தினார். பேராசிரியர் சுப. வீர பாண்டியன் ஏற்புரை யும், நன்றியுரையும் ஆற்றினார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் சிறப்புரை

நிறைவாக, விழா விற்குத் தலைமையேற்று, நூல்களை வெளியிட்ட தி.மு.க. தலைவர் கலை ஞர் அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

சென்னை, மே 17-சென்னை டி.பி.அய். வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகக் கூட்ட அரங்கில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

பள்ளிக் கல்வி முதன்மை செயலாளர் டி.சபீதா மற்றும் பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிவடைந்த பிறகு, அமைச்சர் என்.ஆர்.சிவபதி செய்தியாளர்களிடம் கூறும்போது,

``பிளஸ்-2 மாணவர்களுக்கு 30 ஆம் தேதி புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பாடப்புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், இலவச நோட்டு, புத்தகங்கள் ஜூன் 2 ஆவது வாரத்தில் வழங்கப்படும். பள்ளி பாடப்புத்தகங்கள் சில்லரை விற்பனை கடைகளில் வருகின்ற 23 ஆம் தேதி முதல் கிடைக்கும்'' என்றார்.

சென்னை, மே 15- டெசோ அமைப்பு ஏன் மீண்டும் புதுப்பிக்கப் பட்டது என்பது குறித்த விளக்கத்தை தி லீக் இதழுக்கு (20.5.2012) கலைஞர்கள் அளித்த பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார். பேட்டி விவரம் வருமாறு:

செய்தியாளர்:- டெசோ அமைப்பை மீண்டும் புதுப்பிக்க என்ன காரணங்கள்?

கலைஞர்:- இலங் கைத் தமிழர்களின் துயரங்கள் முடியாமல் தொடர் கதையாக நீண்டு கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது. இலங்கை அதிபர் கொடுத்த வாக்குறுதி களை பல முறை மீறி விட்டார்.

உலக முழுவ திலும் உள்ள ஈழத் தமி ழர்கள் தங்களுக்கு விடி வுக் காலமே இல்லையா என்றெல்லாம் வேதனை யில் ஆழ்ந்துள்ளார்கள். தி.மு.கழகம் 1956ஆம் ஆண்டிலிருந்து இலங் கைத் தமிழர்களின் துயர் துடைக்க எல்லாவித மான முயற்சிகளிலும் ஈடுபட்டும், உண்மை யான விடிவு ஏற்படவே இல்லை.

இதையெல்லாம் மீண்டும் மீண்டும் எண் ணிப் பார்த்த பிறகுதான்; ஜனநாயக முறைப்படி உலகத்தில் பல நாடுகள், அய்க்கிய நாடுகள் மன் றத்தின் தலையீட்டினை அடுத்து பொது வாக் கெடுப்பின் மூலமாக விடு தலை பெற்றதை மன திலே கொண்டு, தனித் தமிழ் ஈழப் பிரச்சினைக் கும் அய்.நா. மன்றம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென் றும், அதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதோடு, அந்த முயற்சியை முன் னெடுத்துச் சென்று, இலங்கையிலே தனித் தமிழ் ஈழம் அமைய மீண்டும் டெசோ அமைப்பினை உருவாக் கிட வேண்டுமென்று எண்ணி செயல்படத் தொடங்கியுள்ளேன்.

டெசோவை புதுப்பிக்க உலகெங்கும் ஆதரவு


செய்தியாளர் :- டெசோவை புதுப்பித் ததற்கும், தனித் தமிழீழ கோரிக்கைக்கும் மக்களி டமும், தமிழ் ஆர்வலர் களிடமும் எந்த அள விற்கு வரவேற்பு கிடைத் திருக்கிறது?

கலைஞர்:- உலகெங் கும் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்களிடமிருந்து தொலைபேசி வாயிலாக வும், கடிதங்கள் வாயி லாகவும் தனித் தமிழ் ஈழக் கோரிக்கைக்கும், டெசோவை புதுப் பித்ததற்கும் ஆதரவு தெரி வித்தும், அந்த முயற்சி விரைவில் வெற்றிய டைய வேண்டுமென்று வாழ்த்தியும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்