Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

நமது நாட்டில் எவனாவது கீழ்ச் சாதியிற் பிறந்தவனாக இருப்பானாகில்  அவனுக்கு மேற்கதி கிடையாது. (ஏன்? இக் கொடுமையென்ன?) இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஒவ்வொருவனுக்கும், உயருவதற்கு வழியும், சந்தர்ப்பமும், நம்பிக்கையுமிருக்கின்றன. இன்று ஒருவன் எளியவனாகக் காணப்படுகின்றான்.

நாளை அவன் செல்வனும், கற்றறிவாளனும், மதிப்புடையோனுமாகக் கூடும். இங்கு ஒவ்வொருவரும் ஏழைகளுக்கு உதவக் கவலையுடையவர்களாக விருக்கின்றனர்.

நாம் எல்லோரும் ஏழைகள் என்ற பேரிரைச்சல் இந்தியாவெங்கும் முழங்குகின்றதே. ஆனால், ஏழைகளின் நன்மைக்காக எத்தனை தரும மடங்களிருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளின் துன்ப துயரத்திற்காக எத்தனை பேர்  உண்மையாகக் கண்ணீர் வடிக்கின்றனர்?

நாமும் மனிதர்களா? அவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் ஜீவனத்திற்காகவும் நாம் என்ன செய்கின்றோம், நாம் அவர்களைத் தீண்டுவதில்லையே! அவர்களை நாம் நெருங்குவதில்லையே! நாம் மனிதர்களா?

அந்த ஆயிரக்கணக்கான பிராமணர்கள், அவர்கள் இந்தியாவில் அதோகதியடைந்திருக்கும் எளிய ஜனங்களுக்காக என்ன செய்கிறார்கள்? தீண்டாதே தீண்டாதே என்ற ஒரே மொழியன்றோ அவர்களுடைய உதடுகளில் சதா உலவுகின்றது? நமது ஸநாதன மதம் அவர்களுடைய கையிலகப்பட்டுக் கொண்டு எவ்வளவு இழிவுற்றுப் பங்கமடைந்து விட்டது? நமது மதம் இப்பொழுது எந்நிலையிற் கிடக்கின்றது? அது இப்பொழுது தீண்டாதே மதத்தில்தான் புரள்கின்றது; மற்றெங்குமன்று....


அன்பும் நல்லெண்ணமுமடைய உங்கள்

விவேகாநந்தா
(சுவாமி விவேகாநந்தரின் கடிதங்கள் முதற்பாகம், பக்கம் 112, ராமகிருஷ்ண மடம், சென்னை)
- குன்றவாணன்  குறிப்பு: தோழர் குன்றவாணன் இதன் நகலை ஞானபூமிக்கும் அனுப்பி உள்ளார்.

இனி வெறும் நடை பயிற்சி வேண்டாம்... வீடு திரும்பியதும் ஷூவில் இருந்து காகித வடிவ ஜெனரேட்டரை எடுத்து செல்போன் சார்ஜ் செய்யலாம், எல்இடி விளக்கை எரிய செய்யலாம். ஆம். நடப்பதில் மின்சார உற்பத்தி செய்ய முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுபற்றி லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் நாளேட்டில் வெளியான செய்தி வருமாறு: அமெரிக்காவின் லாரன்ஸ் பெர்க்லே தேசிய ஆய்வகத்தின் மின்சக்தி துறை விஞ்ஞானிகள் காகித வடிவ ஜெனரேட்டரை வடிவமைத்துள்ளனர். அதை ஷூவில் பொருத்திக் கொண்டு நடந்தால் மின்உற்பத்தி செய்யப்பட்டு சேமிக்கப்படும். ஷூவில் இருந்து ஜெனரேட்டரை எடுத்து இணைத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம். எல்இடி விளக்கை எரிய விடலாம். சிறிய எல்சிடி டிஸ்பிளேவுடன் இருக்கும் இந்த ஜெனரேட்டரை விரலால் தொட்டால் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் தீமை செய்யாத வைரஸ்கள் தூண்டப்பட்டு காந்த சக்தியை மின்சாரமாக மாற்றும். நடக்கும் தூரத்துக்கு ஏற்ப கிடைக்கும் மின்சாரத்தின் அளவு வேறுபடும். எனினும், சராசரியாக ஒரு பென் டார்ச் செல் எனப்படும் ஏஏஏ பேட்டரியை புதிதாக வாங்கும்போது கிடைக்கும் மின்சக்தியில் நான்கில் ஒரு பங்கு மின்சாரத்தை பெற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் அரசுப் பணி இடங்களை நிரப்புவதில் ஸ்டாப் செலக்சன் கமிசன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு முக்கியப் பங்காற்றி வருவது நாம் அறிந்ததுதான். மண்டல வாரியான நான்-டெக்னிகல் குரூப் சி இடங்களை நிரப்புவதில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

தற்போது இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸ் ( குரூப் பி - நான்-கெசடடு ) பிரிவில் உள்ள 134 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு எஸ்.எஸ்.சி., யின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.சி.,யின் இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸின் இள நிலைப் பதவிக்கு விண்ணப்பிக்க 01.08.2012 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜர்னலிசம் பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்கவேண்டும். மொழி வாரியாக இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் எந்தப் பகுதிக்கு விண்ணப்பிக்கிறோமோ அந்தப் பகுதியின் மொழியை ப்ளஸ்டூ அளவிலான படிப்பு வரை படித்திருக்க வேண்டும்.

ஜர்னலிசம், பப்ளிசிடி, பி.ஆர்., ஆகிய பிரிவுகளில் மூன்று ஆண்டு கால பணி அனுபவ இருந்தால் கூடுதல்தகுதியாகக் கருதப்படும். மாஸ் கம்யூனிகேஷனில் டிப்ளமோ, டிகிரி போன்றவற்றிற்கும் முன்னுரிமை உள்ளது. முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

பிற தகவல்கள்: எஸ்.எஸ்.சி.,யின் ஜூனியர் கிரேடு பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-அய் சலான் மூலமாகவோ அல்லது நெட் பேங்கிங் மூலமாகவோ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு மூலமாகவே இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டைப் பொறுத்த வரை இந்த எழுத்துத் தேர்வு சென்னையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்-லைன் முறையிலேயே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் பிரிண்ட் அவுட்டை அனுப்பத் தேவையில்லை. ஆனால் இந்தப் பதிவிற்குப் பின்னர் கிடைக்கும் பதிவு எண்ணை பத்திரமாக வைத்திருக்கவும். முழுமையான விபரங்களை பின் வரும் இணையதளத்திலிருந்து அறியவும். ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 23.05.2012

இணையதள முகவரி: http://ssc.nic.in/notice/examnotice/Junior%20Grade%20in%20%Ministry%20of%20 Information%20and%20No.pdf

மே மாதத்தில் வெளியிடப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 11 பேர் வெற்றி பெற்றிருந்தனர். இம்மாநில வரலாற்றில் அய்.பி.எஸ். தேர்வில் இவ்வளவு பேர் தேர்ச்சி அடைந்திருப்பது இதுவே முதல் தடவை ஆகும். தேர்வானவர் களில் 5 பேர் மருத்துவர்கள், 2 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பண்டிட்கள்.

தீவிரவாதிகளும் பிரிவினைவாதிகளும் நிறைந்த சோப்பூர் பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பஷீர் அகமது பட் தரவரிசையில் 434ஆவது இடத்தை (ரேங்க்) பிடித்துள்ளார்.

169ஆவது இடம் பூஜா ஹாலி, பண்டிட் இனத்தில் இருந்து தேர்ச்சி பெற்றுள்ள 2ஆவது பெண் ஆவார். 25 வயதான சையது ஷெரில் அஸ்கார் 118ஆவது இடத்தை பிடித்தது மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து அய்.பி.எஸ் தேர்வு பெற்ற முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அய்.பி.எஸ்.சில் தேர்வு பெற்றதை நான் ஒரு சவாலாகவே ஏற்றேன். இந்த பெருமை எனது குடும்பத்தாரையே சாரும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றுவதையே விரும்புகிறேன் என்று ஷெரீஸ் மேலும் தெரிவித்துள்ளார். இவரது தந்தை ஜம்மு காஷ்மீர் மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி.) ஆவார்.

குழந்தைகள் அனைவருக்கும் மிகப்பிடித்த விளையாட்டுப் பொருள் பிளாஸ்டிக் பொம்மைகள்..அந்த விளையாட்டுப் பொருட்கள் குழந்தை களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர் நிபுணர்கள்...

குழந்தைகள் பிளாஸ்டிக் பொருட்களை விளையாடும் போது நாள் தோறும் மூன்று மணி நேரத்துக்கு குறையாமல் வாயில் வைத்து சுவைப்பதால் புற்று நோய் ஏற்படக்கூடும் என்று கனடா அரசு ஆய்வு ஒன்று நடத்தியதில் தெரியவந்துள்ளது... முன் நாட்களில் குழந்தைகளுக்கு மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட் களான மரப்பாச்சி பொம்மைகளும் காகித பொம்மைகளும், பனையோலை பொம் மைகளும், மண் பொம்மைகளும் பிடித்திருந்த இடத்தை இன்றைக்கு விதவிதமான பிளாஸ்டிக் பொம்மைகள் ஆக்கிரமித்துள்ளன என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை....

நகரங்கள் முதல் கிராமங்கள் வரை எங்கு திரும்பினாலும் சிறப்பு அங்காடிகளும் அங்கே பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட விதவிதமான விளையாட்டு பொருட்களே இருக்கின்றன...  பிளாஸ்டிக் பொம்மைகள் நெகிழும் தன்மை கொண்டதற்கு காரணம் தாலேட்டு என்னும் இரசாயனப் பொருள்தான்.

குழந்தைகள் விளையாடும் போது மெதுவாய் வாயில் வைத்து  சுவைக் கின்றன.இவையே குழந்தைகளுக்கு நோயை உண்டு பண்ண செய்கிறது. இது விஷத்தன்மை கொண்டதாகும்..பொம்மை தயாரிக்கும் போது சிலர் காரீயம், காட்மீயம் போன்ற பொருட்களை உபயோகப்படுத்துகின்றனர்.இதில் கலக்கப்படும் காரீயம் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது.இதன் விளைவாக குழந்தைகள் மனவளர்ச்சி குன்ற நேரிடும்.

இவை குழந்தைகளின் உடம்பில் தங்கி பல்வேறு நோய்களை உண்டு பண்கின்றன என ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர்

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்