Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

மருத்துவம்

குழந்தைகள் அனைவருக்கும் மிகப்பிடித்த விளையாட்டுப் பொருள் பிளாஸ்டிக் பொம்மைகள்..அந்த விளையாட்டுப் பொருட்கள் குழந்தை களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர் நிபுணர்கள்...

குழந்தைகள் பிளாஸ்டிக் பொருட்களை விளையாடும் போது நாள் தோறும் மூன்று மணி நேரத்துக்கு குறையாமல் வாயில் வைத்து சுவைப்பதால் புற்று நோய் ஏற்படக்கூடும் என்று கனடா அரசு ஆய்வு ஒன்று நடத்தியதில் தெரியவந்துள்ளது... முன் நாட்களில் குழந்தைகளுக்கு மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட் களான மரப்பாச்சி பொம்மைகளும் காகித பொம்மைகளும், பனையோலை பொம் மைகளும், மண் பொம்மைகளும் பிடித்திருந்த இடத்தை இன்றைக்கு விதவிதமான பிளாஸ்டிக் பொம்மைகள் ஆக்கிரமித்துள்ளன என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை....

நகரங்கள் முதல் கிராமங்கள் வரை எங்கு திரும்பினாலும் சிறப்பு அங்காடிகளும் அங்கே பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட விதவிதமான விளையாட்டு பொருட்களே இருக்கின்றன...  பிளாஸ்டிக் பொம்மைகள் நெகிழும் தன்மை கொண்டதற்கு காரணம் தாலேட்டு என்னும் இரசாயனப் பொருள்தான்.

குழந்தைகள் விளையாடும் போது மெதுவாய் வாயில் வைத்து  சுவைக் கின்றன.இவையே குழந்தைகளுக்கு நோயை உண்டு பண்ண செய்கிறது. இது விஷத்தன்மை கொண்டதாகும்..பொம்மை தயாரிக்கும் போது சிலர் காரீயம், காட்மீயம் போன்ற பொருட்களை உபயோகப்படுத்துகின்றனர்.இதில் கலக்கப்படும் காரீயம் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது.இதன் விளைவாக குழந்தைகள் மனவளர்ச்சி குன்ற நேரிடும்.

இவை குழந்தைகளின் உடம்பில் தங்கி பல்வேறு நோய்களை உண்டு பண்கின்றன என ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர்

அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும். அத்திப்பாலை மூட்டு வலிகளுக்குப் பற்று போட விரைவில் வலி தீரும்.

முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிசர்க்கரைக் கிழங்கு சம அளவாக இடித்துச் சலித்த பொடியில் 5 கிராம் 5 மி.லி அத்திப் பாலைக் கலந்து காலை மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.

அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.

அத்திப் பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக உருட்டிவைத்துக் காலை மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுப்போக்கு தீரும்.

அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர்- காலை, மாலை குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.

மனிதன் முக அழகில் மட்டும் அல்ல, உடல் நலத்திலும் முக்கிய பங்கு வகிப்பது பற்கள். சிலருக்கு பற்கள் முன்பக்கமாக நீண்டும், வரிசையாக இல்லாமலும்  இருக்கும். இதன் காரணமாக அவர்களது முக அழகு சிதைந்து விடும். இதனால் ஏராளமானோர் தன்னம்பிக் இழந்து வாழ்வில் எதையும் சாதிக்க முடியாதவர்களாக மாறி விடுகிறார்கள்.

பற்களின் அழகு சிதைந்து போவதற்கு குழந்தை பருவத்தில் அதை முறையாக கவனித்து பராமரிக்காதது தான் காரணம். குழந்தைப் பருவத்தில் இருந்தே பல் குழந்தை நல மருத்துவ நிபுணரிடம் குழந்தைகளைக் காண்பித்தால், பற்களின் ஆரோக்கியம், அழகு கெடாமலும், பல் சிதையாமலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் குழந்தைகள் பல் மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் சரவணகுமார்.

ஒரு குழந்தையின் பல் வரிசை சரி இல்லாமல் போனால் முக அழகு சிதைந்து விடும். பற்கள் நன்றாக இருந்தால் தான் முகம் அழகுடன் பளிச்சிடும். பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. இதற்கேற்ப குழந்தைகளின் பல் சொத்தையாகி விழுந்து விட்டால் அவர்களால் தெளிவாக பேசமுடியாது. இதனால் தன்னம்பிக்கை இழந்து விடுவார்கள்.

குழந்தைகளுக்கு ஒரு சில பற்கள் விழுந்து விட்டாலும் கூட அவர்களால் உணவை நன்றாக மென்று சாப்பிட முடியாது. இதனால் அவர்களுக்கு அடிக்கடி அஜீரண கோளாறு ஏற்படும். குழந்தையின் சிரிப்பிலும் பல் முக்கிய பங்கு வகிக்கிறது. பல் இல்லாத குழந்தையின் சிரிப்பு அதன் அழகை சிதைத்து விடும்.

பல் முளைக்கும் காலம்:


குழந்தைக்கு 6 முதல் 7ஆம் மாதத்திற்குள் பல் முளைக்க தொடங்கும். 19ஆவது மாதத்தில் 20 பற்கள் முளைத்து விடும். பல் முளைக்கும் கால கட்டத்தில் தான் குழந்தை கண்ட கண்ட பொருட்களையும் எடுத்து வாயில் வைத்து கடிக்கும். இதனால் நோய் தொற்றி காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம்.

இதனால் பெற்றோர் அந்த சமயத்தில் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இல்லா விட்டால் கிருமித்தொற்றால் பல்வேறு நோய்களின் பிடியில் குழந்தை சிக்க நேரிடும். குழந்தையின் பல் விஷயத்தில் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

குழந்தை சாக்லெட், அய்ஸ்கிரீம் போன்றவை சாப்பிடும் போது அதில் உள்ள இனிப்பு வாயில் ஒட்டிக் கொண்டால் பல் சொத்தையாகி விடும். எனவே எந்த உணவுப் பொருள் கொடுத்தாலும் சாப்பிட்ட பிறகு குழந்தையின் வாயை நன்றாக கழுவுவது நல்லது.

நொறுக்குத் தீனி சாப்பிடும் குழந்தைகள் தான் அதிக அளவில் பற்களை இழந்து தவிப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு நொறுக்கு தீனியை ஆசை, ஆசையாக வாங்கித் தரும் பெற்றோர், சாப்பிட்டு முடிந்ததும் குழந்தையின் வாய்க்குள் தண்ணீர் விட்டு கழுவி விடுவது நல்லது.

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் உடல் பருமன் கொண்டவர்களுக்கும் ஆழ் குருதி நாள ரத்தக்கட்டு என்று அழைக்கப்படும்  (Deep Vein Thrombosis)  நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடை அல்லது கெண்டை சதை பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் ஏற்படும் ரத்தக்கட்டையே குறிக்கும்.

நீண்ட நேரம் அசையாமல் உட்கார்ந்திருப்பது, கை கால்களை அசைக்காமல் நீண்ட நேரம் படுக்கையில் படுத்திருப்பது. விமானம், கார்களில் நீண்ட தூரம் செல்வது, சமீப அறுவை சிகிச்சை அல்லது காயம் (குறிப்பாக இடுப்பு, முழங்கால் அல்லது மகப்பேறு அறுவை சிகிச்சை) எலும்பு முறிவு, ஈஸ்ட்ரோஜென் மற்றும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை ஆழ் குருதி நாள ரத்தக்கட்டு ஏற்படுவதற்கு காரணமாகின்றன.

இளைய தலைமுறை பாதிப்பு

வயதானவர்களுக்கும், அதிக எடை உள்ளவர் களுக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது நீண்டநேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்யும் இளைய தலைமுறையினரை இது பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் பெருகி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக் கின்றனர். இந்த ரத்தக் கட்டு ஏற்பட்டால் அந்த நாளத்தில் ரத்த ஓட்டத்தை முழுதுமோ அல்லது பகுதியாகவோ அடைத்துவிடும். இந்த ரத்தக்கட்டு கால் கீழ் பகுதி மற்றும் தொடை பகுதியிலேயே ஏற்படுகிறது. அப்பகுதியில் உள்ள பெரிய குருதி நாளங்களிலும் ரத்தக் கட்டு ஏற்படுவதில் இது பங்களிக்கிறது. ரத்த ஓட்டத்தை தடுத்து அல்லது ரத்தக்கட்டானது ரத்த ஓட்டத்துடனேயே சென்று ரத்தக் குழாய் அடைப்பை ஏற்படுத்தும் அபாயம் மிக்கது.

உயிருக்கே ஆபத்து

இந்த ரத்தக்கட்டு பாதிப்புகளினால் உயிருக்கே ஆபத்தாகும் நுரையீரல் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ரத்த நாளச் சுவரிலிருந்து ரத்தக்கட்டு வெளியேறி நுரையீரலுக்குச் சென்று அதன் நரம்புகளை அடைக்கும். இந்த நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு உயி ருக்கு ஆபத்து விளைவிப்பது, உடனடியாக மருத்துவ சிகிச் சை தேவைப்படுவது. இந்த ரத்தக்கட்டு பிளசன்டாவி லுள்ள ரத்தக் குழாயில் தங்கி னால் கருப்பையில் உள்ள கருவிற்கு ஆக்சிஜன் குறை வாகச் செல்லும். இதனால் குழந்தை பிறப்பு மிகுந்த பிரச்சினைக்குள்ளாகும்.

என்ன அறிகுறிகள்?

இந்த நோய்க்கான அறிகுறிகளாக கால்வலி அல்லது ஒரு காலில் வீக்கம் ஏற்படுதல். உடலில் உஷ்ணம் அதிகரிப்பு. சரும நிறம் சிகப்புத் தன்மையாக மாறும் என்கின்றனர் மருத்துவர்கள். ரத்தக்கட்டு இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் முதலில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக் கின்றனர். காலை மேலே தூக்கும்போது வலி ஏற்பட்டால் அந்தப் பகுதியில் ரத்தக்கட்டு இருப்பதற்கான அறிகுறி உள்ளது. மேலும் இதனைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கால் ரத்த நாளத்தில் டை ஊசி மருந்து மூலம் செலுத்தப்பட்டு காலை எக்ஸ் ரே எடுக்கப்படுவதும் உண்டு. இந்த ரத்தக்கட்டை முன்னதாகவே கண்டுபிடித்து முறையாக சிகிச்சையளித்தால் பாதிப்பு ஏற்படாது. அதேசமயம் கவனக் குறைவாக சிகிச்சை எதுவும் எடுக்காமல் இருந்தோமானால் உயிருக்கே ஆபத்தாகும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அடிக்கடி நடங்க ஒரே நிலையில் நீண்டநேரம் உட்காரு வது, நிற்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஓய்வு நிலையிலும் கால்களை அசைத்துக் கொண்டிருங்கள். கால் விரல் மற்றும் முழங்கால்களை மடக்கி நீட்டியபடி இருங்கள். உட்கார்ந்திருக்கும்போது அல்லது படுத்திருக்கும்போது கால் மேல் கால் போடுவதை தவிர்க்கவும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிஃப்ளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம். முட்டைக்கோஸும் காலிஃபிளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. இது சாதாரணமாக வெள்ளையாகவோ, இளம் மஞ்சளாகவோ காணப்படும். மேலும் இவற்றில் வயலட் கலர் காலிஃபிளவரும் உண்டு.

காலிஃப்ளவர் ஒரு குளிர்பிரதேச காய்கறி. இது குளிர்காலங்களில் அதிக அளவில் கிடைக்கின்றது. இத்தாலியில் அதிக அளவில் விளைவிக்கப்பட்ட காலிஃப்ளவரானது முதன்முதலில் ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது. அக்காலத்தில் தென்னிந்திய மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாததால் இதற்கு தமிழில் பெயர் இல்லை. ஆங்கிலப் பெயரான காலிஃப்ளவர் என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது. காலிஃப்ளவரில் பொட்டாசியம், விட்டமின் சி ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24, புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கியுள்ளன. மேலும் இது நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாகும்.

இந்த காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும். இதில் ஒரு வித தாவர அமிலம் உள்ளது. வேகும்போது கந்தகக் கலவையாக மாறி வாசனை வருகிறது. அதிக நேரம் வேக வைத்தால் வாசனை அதிகமாகும். சத்தும் வீணாகும். அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைக்கக்கூடாது. இதிலுள்ள கந்தகக் கலவை அலுமினியத்துடன் சேர்ந்தால் பூ மஞ்சளாகிவிடும். இரும்பு இதை பிரவுன் கலராக்கிவிடும். இதை தண்ணீரில் வேகவைப்பதை விட நீராவியிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேகவைக்கலாம். வைட்டமின் சி சத்து அதிகரிக்கும். காலிஃப்ளவரில் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது. காலிஃப்ளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது. பூ வேகும்போது ரசாயனம் வெளிவருகிறது. இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும்   புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது. இது இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளை போக்கவல்லது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.



கோடையில் எது சூடு? எது குளிர்ச்சி?

 

வெயிலின் உக்கிரத்தால் உடலிலுள்ள நீர்ச்சத்து வறண்டு கொண்டே இருக்கும். அதை சரிசெய்ய, இழந்த நீர்ச்சத்தை உடலுக்குத் திருப்பித் தர வேண்டும். நீர்ச்சத்து என்றதும், ஜூஸ்தான் குடிக்க வேண்டும் என்பது பலரது அபிப்ராயம். ஜூஸ் என்றில்லாமல், எல்லா திரவ உணவுகளும் நல்லது நிறைய நிறைய தண்ணீர் குடியுங்கள். தாகம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் முடிந்த போதெல்லாம், ஞாபகம் வரும்போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள். உடலின் நீர்ச்சத்து இழக்கப்படுகிறபோது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும் சேர்ந்தே இழக்கிறோம். அதை ஈடுகட்ட பழ சாறு எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணி, கிர்ணி, திராட்சை, இளநீர் போன்றவற்றில் சோடியம், பொட்டாசியம், தண்ணீர் என மூன்றுமே இருப்பதால் அவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம். பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது! பழத்தின் கசப்பான தோல் பகுதியையும், விதைகளையும் நீக்கிவிட்டு, சர்க்கரை சேர்க்காமல், அப்படியே மிக்சியில் அடித்து கெட்டியாகக் குடிக்கலாம்.

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்