
பூமியில் இருந்து 10 கோடி மைலுக்கு அப்பால் உள்ள செவ் வாய்க்கிரகம், விண்வெளி ஆராய்ச்சி யாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் அரிய `பொக்கிஷமாக விளங்கி வருகிறது. சிவப்புக் கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய்க்கிரகத்தில் நமது பூமியில் இருப்பது போன்றே பாறைகளும் மணல் குன்றுகளும் உள்ளன. அங்கு தண்ணீர் இருந்ததற் கான ஆதாரங்களும் கிடைத்தி ருப்பதால் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம், அல்லது ஒரு காலத்தில் வசித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதை அடிப்படையாக கொண்டு, பல நாவல்களும், திரைப் படங்களும் வெளிவந்துள்ளன.இந்த நிலையில், செவ்வாய்க்கிரகத்தில் மனிதர்கள் இருப்பதற்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில் புதிய ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது.அமெரிக்காவின் `நாசா விண்வெளி ஆய்வு மையம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட செயற்கை கோள் மூலம் `ஸ்பிரிட் விண்கலம் (6 சக்கரங்களை கொண்ட ரோபாட்) செவ்வாய்க்கிரகத்தில் இறக் கப்பட்டது. அது பல மாதங்கள் அங்கு செயல்பட்டு பல்வேறு தகவல்களையும், புகைப்படங்களையும் அனுப்பி வைத் தது. அந்த ரோபாட் அனுப்பிய புதிய படம் ஒன்றுதான் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அது அனுப்பிய ஒரு படத்தில் மனித உருவம் இடம் பெற்றிருப்பது, விண்வெளி ஆர்வலர்களின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. அந்த படத்தில் பூமியில் இருப்பது போன்ற பரந்து விரிந்த பாலைவனம் போன்ற மணல் பகுதியும், ஆங்காங்கே பாறைக் குன்றுகளும் காணப்படுகின்றன. அதில் ஒரு குன்றில் இருந்து மனித உருவம் இறங்குவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. தலையை பக்கவாட்டில் சாய்த்தபடி, `பேலன்ஸ் செய்து கொள்வதற்காக வலது கையை நேராக நீட்டியபடி மெதுவாக கீழே இறங்குவது போல் அந்த உருவம் காட்சி அளிக் கிறது. இந்த அரிய புகைப்படம், விஞ் ஞானிகளின் ஆய்வுக்கு புதிய `தீனியாக அமைந்துள்ளது. செவ்வாய்க்கிரகத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான முக்கிய ஆதாரம் இது என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.ஆனால், எதிர்தரப்பினர் இது வெறும் `மாயை என்கிறார்கள். பாறையின் மீது பட்ட வெளிச்சத்தின் நிழல், `செவ்வாய்க்கிரக வாசி போல் தோற்றம் அளிக்கிறது என்பது அவர்கள் வாதம்.