கடினமாக உழைப்பதற்கு அடையாளமாக எறும்புகளைச் சொல்வர். அதை, ஜெர்மனி யின் ரெகென்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
மிகவும் இனிப்பான உணவை சற்று தொலைவிலும், சற்றே இனிப்பும் தரமும் குறைவான உணவை அருகாமையில் வைத்தும் விஞ்ஞானிகள் சோதித்தனர்.
எறும்புகள் இரண்டு உணவையும் ருசித் துப் பார்த்தன. அருகே உள்ளது தரக்குறை வானது என்று தெரிந்ததும், சற்று தொலைவில் உள்ள உணவையே எல்லா எறும்புகளும் தேடிப்போய் உண்டு வந்தன. எனவே, எறும் புகள் தரமானதை சிரமப்பட்டாவது உண்ண வேண்டும் என்ற எண்ணம் கொண்டவை என்று விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தனர்.