Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

இளைஞர்

மத்திய அரசின் அரசுப் பணி இடங்களை நிரப்புவதில் ஸ்டாப் செலக்சன் கமிசன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு முக்கியப் பங்காற்றி வருவது நாம் அறிந்ததுதான். மண்டல வாரியான நான்-டெக்னிகல் குரூப் சி இடங்களை நிரப்புவதில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

தற்போது இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸ் ( குரூப் பி - நான்-கெசடடு ) பிரிவில் உள்ள 134 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு எஸ்.எஸ்.சி., யின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.சி.,யின் இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸின் இள நிலைப் பதவிக்கு விண்ணப்பிக்க 01.08.2012 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜர்னலிசம் பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்கவேண்டும். மொழி வாரியாக இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் எந்தப் பகுதிக்கு விண்ணப்பிக்கிறோமோ அந்தப் பகுதியின் மொழியை ப்ளஸ்டூ அளவிலான படிப்பு வரை படித்திருக்க வேண்டும்.

ஜர்னலிசம், பப்ளிசிடி, பி.ஆர்., ஆகிய பிரிவுகளில் மூன்று ஆண்டு கால பணி அனுபவ இருந்தால் கூடுதல்தகுதியாகக் கருதப்படும். மாஸ் கம்யூனிகேஷனில் டிப்ளமோ, டிகிரி போன்றவற்றிற்கும் முன்னுரிமை உள்ளது. முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

பிற தகவல்கள்: எஸ்.எஸ்.சி.,யின் ஜூனியர் கிரேடு பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-அய் சலான் மூலமாகவோ அல்லது நெட் பேங்கிங் மூலமாகவோ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு மூலமாகவே இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டைப் பொறுத்த வரை இந்த எழுத்துத் தேர்வு சென்னையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்-லைன் முறையிலேயே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் பிரிண்ட் அவுட்டை அனுப்பத் தேவையில்லை. ஆனால் இந்தப் பதிவிற்குப் பின்னர் கிடைக்கும் பதிவு எண்ணை பத்திரமாக வைத்திருக்கவும். முழுமையான விபரங்களை பின் வரும் இணையதளத்திலிருந்து அறியவும். ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 23.05.2012

இணையதள முகவரி: http://ssc.nic.in/notice/examnotice/Junior%20Grade%20in%20%Ministry%20of%20 Information%20and%20No.pdf

இந்தியாவின் வரைபட அமைப்பில் தமிழக எல்லைக்குள் அமைந்துள்ள புதுச்சேரியில் பெரும்பான்மையான மக்கள் தமிழையே பேசுவது நாம் அறிந்ததுதான். தற்போது இந்த பிரதேசத்தில் அரசுப் பணி இடங்களான 119 அப்பர் டிவிஷன் கிளர்க் மற்றும் 35 சீனியர் கிளர்க் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரியில் வசிப்பராகவோ அல்லது நிரந்தர புதுச்சேரி இருப்பிடம் கொண்டவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான நேட்டிவிட்டி சான்றிதழைப் பெற்றிருப்பது மிக மிக அடிப்படைத் தேவையாகும்.

என்ன தேவை: புதுச்சேரி அரசின் அரசுப் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 2.2.2012 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதில் சலுகைகள் அரசு நிபந்தனைகளுக்கு ஏற்றபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்கள் அறிய இணையதளத்தைப் பார்க்கவும். யூ.டி.சி., பிரிவுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதே போல் சீனியர் கிளர்க் பதவிக்கு விண்ணப்பிக்க கலை அல்லது அறிவியல் புலங்கள் ஏதாவது ஒன்றில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பொது எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற தகவல்கள்: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் பெற்றவர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை எடுத்து பின்வரும் முகவரிக்கு 15.06.2012-க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற இணையதளத்தை  பார்க்கவும்.

முகவரி: The Undersecretary to Government, Department of Personnel and Administrative Reforms, Chief Secretariat, Puducherry 605001. ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 31.05.2012 விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 15.06.2012 இணையதள முகவரி www.pon.nic.in/recruitment/DPAR&UDC&2012/notification&udc&200412.pdf

இ.சி.அய்.எல்., எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய அணுசக்தித் துறையின் கீழ் 1967இல் உருவாக்கப்பப் பட்டது. எலக்ட்ரானிக்ஸ் துறையில் தன்னிறைவு பெறும் நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டது.

தற்போது இந்த நிறுவனம் கம்ப்யூட்டர், கட்டுப்பாட்டு அமைப்புகள், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் வர்த்தகம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவுகளில் உள்ள 107 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது.

தேவைகள்: இ.சி.அய்.எல்., நிறுவனத்தின் இன்ஜினி யரிங் காலி இடங்கள் இ.சி.இ., இ.இ.இ., இ அண்டு அகய்., சி.எஸ்.இ., சிவில் மற்றும் மெக்கானிகல் ஆகிய இன்ஜினியரிங் பிரிவுகளில் உள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30.04.2012 அன்று 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இன்ஜினியரிங் பிரிவு ஏதாவது ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக குறைந்த பட்சம் 65 மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அரசு நிபந்தனை களுக்கு உட்பட்டு இந்த காலி இடங்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. தற்போது இறுதித் தேர்வை முடித்துவிட்டு தேர்வு முடிவுகளை எதிர்பார்த்திருப்பவர் களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். முது நிலை பட்டப் படிப்பை முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப் பிக்கக் கூடாது.

இதர விபரங்கள்: மேலே கூறப்பட்டுள்ள இன்ஜினியரிங் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை சலான் மூலமாக ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கியில் 31102144119 என்ற அக்கவுண்ட் எண்ணில் செலுத்தவேண்டும். இதன் பின்னர் ஆன்-லைனில் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். தேர்வு செய்யப்பட்டவர்கள் முதலில் மாதம் ரூ. 25 ஆயிரத்து 790 ஸ்டைபண்டுடன் பணியில் சேரலாம். ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 21.05.2012 இணையதள முகவரி: றறற.நஉடை.உடி.

இந்திய மாநிலங்களில் சுதந்திரத்திற்கு முன்னரே சர்வீஸ் கமிஷன் அமையப் பெற்ற முதல் மாநிலம் தமிழ் நாட்டில்தான் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மையாகும்.

மெட்ராஸ் பிரசிடென்சி காலத்திலேயே மெட்ராஸ் சர்வீஸ் கமிஷனை 1929ல் அமைத்தனர். பின்னர் பல்வேறு மாற்றங்களைப் பெற்று தற்போது தமிழ் நாடு சர்வீஸ் கமிஷன் என்ற டி.என்.பி.எஸ்.சி., யாக தற்போது செயல்படுகிறது. தமிழ் நாட்டின் அரசுப் பணிகளுக்கான ஊழியர்களைத் தேர்வு செய்வதில் இந்த அமைப்பு பிரசித்தி பெற்றது. தற்போது இந்த அமைப்பின் சார்பாக 75 எக்சிகியூடிவ் அதிகாரிகளை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது.

தேவைகள்: டி.என்.பி.எஸ்.சி.,யின் எக்சிகியூடிவ் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ஆம் வகுப்பு அல்லது முந்தைய மெட்ரிக் அளவான 11ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாகத் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற தகவல்கள்: டி.என்.பி.எஸ்.சி.,யின் எக்சிகியூடிவ் அதிகாரி பிரிவுக்கு விண்ணப்பிக்க ரூ.150/-அய் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதிலிருந்து விலக்குப் பெறத் தகுதியானவர்கள் ரூ.50/- மட்டும் செலுத்தினால் போதுமானது.

ஏற்கெனவே 'ஒரு முறைப் பதிவு' செய்து கட்டணம் கட்டியவர்கள் 5 வருட காலத்திற்கு, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இந்தக் கட்டணத்தை ஆப்-லைன் முறையில் செலுத்த விரும்புபவர்கள் அஞ்சல் அலுவலகத்தின் மூலமோ அல்லது ஏதாவது ஒரு இந்தியன் வங்கி கிளையின் மூலமாகவோ செலுத்தலாம். ஆன்-லைன் முறையில் நெட் பேங்கிங், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவும் இந்தக் கட்டணத்தை செலுத்த முடியும்.

கட்டணத்தை செலுத்திய பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை 28.05.2012க்குள் பதிவு செய்ய வேண்டும்.

முழுமையான தகவல்களைப் பெற பின் வரும் இணையதளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.

ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய இறுதி நாள் : 28.05.2012

இணையதள முகவரி : www.tnpsc.gov.in/notifications/14_2012_not_eng_eo_grIII.pdf

இந்திய அரசின் அமைச்சக மற்றும் அரசுத் துறை சார்ந்த நிறுவனங்களில் உள்ள காலி இடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பி வருகிறது. எஸ்.எஸ்.சி., தற்போது ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஸ்டாப் செலக்சன் கமிஷனின் ஸ்டெனோகிராபர் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.08.2012 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பிளஸ் 2-விற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் ஸ்டெனோகிராபியில் ஆங்கிலம் அல்லது இந்தியில் ஒரு நிமிடத்திற்கு 100 வார்த்தை களை கம்ப்யூட்டர் வாயிலாக மாற்றம் செய்யும் திறன் பெற் றிருக்க வேண்டும். 2 கிரேடு பதவிகளுக்கும் தனித் தனியாக தேவைகள் மாறுபடுகின்றன. முழுமை யான விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்தைப் பார்க்கவும்.

எஸ்.எஸ்.சி., நடத்தும் ஸ்டெனோகிராபர் தேர்ச்சித் தேர்வில் எழுத்துத் தேர்வு, ஸ்கில் டெஸ்ட் எனப்படும் திறனறியும் தேர்வு போன்ற 2 நிலைகள் இருக்கும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-அய் சென்ட்ரல் ரெக்ரூட்மெண்ட் ஸ்டாம்ப் வாயிலாக செலுத்தலாம். அல்லது ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கியில் சலான் மூலமாக செலுத்தி ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். மகளிர், எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத் தினர் போன்ற பிரிவினருக்குக் கட்டணம் எதுவும் கிடையாது.

மூன்று பிரிவுகளைக் கொண்ட எழுத்துத் தேர்வில் ஜெனரல் இண்டலிஜென்ஸ் அண்டு ரீசனிங், ஜெனரல் அவேர்னஸ் ஆகிய பிரிவுகளில் தலா 50 கேள்விகளும், இங்கிலீஷ் லாங்குவேஜ் பிரிவில் 100 கேள்விகளும் அப்ஜெக்டிவ் வகையில் இருக்கும். இத்தேர்வை 2 மணி மற்றும் 40 நிமிடங்களில் முடிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அந்தந்த மாநிலத்திற்கேற்ற எஸ்.எஸ்.சி., வட்டார அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தமிழ் நாட்டிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் பின் வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்தி லிருந்து அறியவும்.

முகவரி: Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, CHENNAI - 600006.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 25.05.2012
இணையதள முகவரி : http://ssc.nic.in/notice/examnotice/Steno_C_D_Exam2012.pdf

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்