Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

உலகம்

போர் விமானங்கள் நடுவானில் மோதி வீடுகள் மீது விழுந்து நொறுங்கின

இஸ்லாமாபாத், மே.18- பாகிஸ்தானில் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதி வீடுகள் மீது விழுந்து நொறுங்கின. இதில் 4 விமானிகள் பலியானார்கள். வீடுகளில் இருந்த 3 குழந் தைகள், பெண் உள்பட 5 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

பாகிஸ்தானில் உள்ள ரிசால்பூர் என்ற இடத்தில் விமானப்படை பயிற்சி அகாடமி உள்ளது. இங்கிருந்து நேற்று காலை 10 மணி அளவில் 2 போர் விமானங்கள் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றன.

சிறிது நேரத்தில் அந்த 2 போர் விமானங் களும் எதிர்பாராதவிதமாக நடுவானில் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதின. இதனால் 2 விமானங்களும் தீப்பிடித்து எரிந்த படி தரையை நோக்கி பாய்ந்து வந்தன.

விபத்துக்குள்ளான இந்த 2 போர் விமானங் களும் பெஷாவர் நகரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ரஷ்கை என்ற ஊரில் உள்ள வீடுகள் மீது விழுந்து நொறுங் கின. இதில் 2 வீடுகளின் கூரைப்பகுதி, சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தன. விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் அந்த பகுதியில் சிதறி கிடந்தன.

இதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஓடி வந்து மீட்பு பணி யில் ஈடுபட்டார்கள். வீட்டின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டார்கள். இச்சம்பவத்தில் போர் விமானங்களை ஓட்டி வந்த 4 விமானிகளும் உயிர் இழந்தனர்.

வீடுகளில் வசித்த 3 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. ராணுவ அதிகாரிகளும், காவல்துறை யினரும் சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 11ஆம் தேதி கராச்சி அருகே போர் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது. தற்போது ஏற்பட்ட விபத்து 2ஆவது சம்பவம் ஆகும்.

இலங்கை ராணுவ முன்னாள் தளபதி பொன்சேகாவை விடுதலை செய்ய அமைச்சரவை ஒப்புதலாம்

கொழும்பு, மே 18- சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவை விடு தலை செய்வதற்கு அந்நாட்டு அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தத் தகவலை அதிபர் மாளிகைச் செய்தித் தொடர்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்தார்.

பொன்சேகா எப்போது விடுவிக்கப் படுவார், அவரது மனைவி அனோ மா கூறியதைப் போல விடுதலை நிபந்தனையற்றதாக' இருக்குமா என்று கேட்டபோது, அவை தொடர்பாக இன்னும் முடி வெடுக்கப் படவில்லை. இப்போ தைக்கு அமைச்சரவையின் ஒப்பு தலை மட்டும் அதிபர் பெற்றிருக் கிறார்'' என்றார் ஜெயசேகர.

பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக அனோமாவை அதிபர் ராஜபக்சே புதன்கிழமை சந்தித்துப் பேசினார். பொன்சேகாவின் ஜனநாயக தேசியக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரன் அலஸ் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. பொன்சேகாவை விடுவிப்பதற்காக அரசு தரப்பிலான நிபந்தனைகள் பற்றி அப்போது எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அலஸ் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய பொன்சேகா, ராஜபக்சே உள்ளிட் டோர் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளைக் கூறினார். பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக் சேவை எதிர்த்து நின்று தோல்வி யடைந்தார்.

இதையடுத்து, அரசுக்கு எதிராகச் செயல்படுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2010, பிப்ரவரி 8ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். ராணுவ மற்றும் மக்கள் நீதிமன்றங்களில் இது தொடர்பாக நடந்த வழக்குகளில் அவருக்கு ஒட்டுமொத்தமாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பொன்சேகாவோ, அவரது மனைவி, மகள் உள்ளிட்ட நெருங்கிய குடும்பத்தினரோ கோரினால் கருணை அடிப்படையில் அவரை விடுவிப்பது பற்றிப் பரிசீலிக்கப் படும் என்று பல்வேறு தருணங் களில் ராஜபக்சே அறிவித்தார்.

ஆனால், கருணை வழங்குவது தொடர்பான பேச்சுகள் எழும் போதெல்லாம், பொன்சேகாவும் அவரது குடும்பத்தினரும், கருணை கோரும் வகையில் எந்தக் குற்றமும் செய்யவில்லை'' என்று கூறி அதி பரின் அழைப்பை நிராகரித்து வந்தனர். பொன்சேகா அமெரிக் காவின் குடியுரிமை பெற்றவர் என்பதால், அவரை விடுவிக்க வேண் டும் என்று அந்த நாடு இலங்கைக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மே 18ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) அமெரிக்காவில் அந் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனை இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் சந்திக்க இருக்கும் நிலையில், யாரும் கருணை கோரா மலேயே பொன்சேகாவை விடுவிக் கும் முடிவை அரசு எடுத்திருப் பதற்கும் இதுவே காரணம் என்றும் நம்பப்படுகிறது.

ஆர்ப்பாட்டம் நடத்திய 300 போராட்டக்காரர்களின்

ஜெர்மனியிலுள்ள அய்ரோப்பியன் மத்திய வங்கி அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய 300 போராட்டக்காரர்களின் கூடாரத்தினை காவலர்கள் அப்புறப்படுத்தினர்.

3 நாடுகளின் தூதரகங்களுக்கு மிரட்டல்

இஸ்லாமாபாத், மே.18- ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைக்கு பொருட் களை எடுத்து செல்லும் வழியை பாகிஸ்தான் மூடி வைத் துள்ளது.

அமெரிக்கா நெருக் கடியை அடுத்து இந்த வழியை திறக்க பாகிஸ்தான் தீர்மானித் துள்ளது. இந்நிலையில் பாகிஸ் தானில் இருக்கும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்சு நாடுகளின் தூதரகங் களுக்கு பார்சல்கள் வந்தன. அதில் விஷம் கலந்த சுமார் 1/2 கிராம் எடையுள்ள பவுடர் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

உடனே இந்த பார்சல்கள் பாகிஸ்தான் காவல்துறையி னரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த தகவலை இஸ்லாமாபாத் காவல்துறை உயர் அதிகாரி யாமின்கான் உறுதி செய்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

`சிந்து மாகாணத்தில் உள்ள அய்தராபாத்தில் இருந்து இவை வந்துள்ளன. அதில் நேட்டோ படைக்கு வழியை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 3 வரி களில் மிரட்டல் வாசகம் இடம் பெற்று இருக்கிறது. கறுப்பு நிறத்தில் இருக்கும் இந்த பவுடர் வெடிமருந்து அல்ல' என்று கூறினார். கைப்பற்றப் பட்ட இந்த மர்ம பவுடர் என்ன? என்பதை கண்டறிய பரிசோ தனை கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சீக்கியர்கள் தலைப்பாகையுடன் காவல் பணியாற்ற அனுமதி

வாஷிங்டன், மே 18-  இனி அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலும் தலைப்பாகை, மீசை, தாடியுடன் பணியாற்றும் காவல் துறையினரைக் காண முடியும். சீக்கியர் களின் மத அடையாளங்களான இவற் றுடன் பணியாற்ற வாஷிங்டன் காவல் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வாஷிங்டன் காவல்துறை தலைவர் காத்தே லீனியர் தெரிவித்தார். சீக்கிய மதத்தைச் சேர்ந்த 4,000 வீரர்கள் பயிற்சிக்கு சென் றுள்ளனர் என்றும், ஆகஸ்ட் மாதத்தி லிருந்து படிப்படியாக இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் அவர் கூறினார்.

தலைப்பாகை அணிவது, தாடி, மீசை வைப்பது மேலும் குறுவாள் எனப்படும் சிறிய கத்தியை தலைப்பாகைக்குள் வைத்திருப்பது ஆகியன சீக்கியர்களின் மத நம்பிக்கையாகும்.

பொதுவாக மேற் கத்திய நாடுகளில் தாடி, மீசை மற்றும் தலைப்பாகையுடன் சீக்கியர்கள் பணி யாற்றுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. பிறகு அவர்களின் மத உணர்வு களுக்கு மதிப்பளித்து அவர்களை பணியில் சேர்த்துக் கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை பிற நாடுகள் மேற் கொண்டுள்ளன.

அமெரிக்காவிலும் பிற மாகாணங்களில் காவல்துறையில் சீக்கியர்கள் மத அடையாளங்களுடன் பணி புரிய அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஏற்கெனவே அமெரிக்க ராணுவத்தி லும் சீக்கியர்கள் உள்ளனர். அமெரிக்க வாழ் சீக்கியர்கள் காவல்துறையில் சேர்ந்த பிறகு முழு கடமை உணர்வோடு நாட்டுக் காக பணியாற்றுவர். அதற்காக அவர் களது மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து இத்தகைய விதி விலக்கு அளிக்கப்பட் டுள்ளதாக லீனியர் தெரிவித்தார். 9 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க சீக்கியர்கள், சாலை விதிமீறல் கட்டுப்பாட்டு அதிகாரிகளாக நியமிக்கப் பட்டனர்.

இப்போது முழு நேர காவல் பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட் டுள்ளதாக அமெரிக்க வாழ் சீக்கியர்களுக் கான சட்ட பாதுகாப்பு மற்றும் கல்வி நிதியத்தின் செயல் இயக்குநர் ஜஸ்ஜித் சிங் தெரிவித்தார்.

தலைநகர் வாஷிங்டனில் தலைப்பாகை அணிந்து பணியாற்ற சீக்கிய காவல்துறைக்கு அனுமதி அளித்த போதிலும் நியூயார்க் மாகாண காவல் துறையில் இன்னமும் அனுமதி அளிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கனடா மற்றும் பிரிட்டனில் காவல்துறையில் பணியாற்ற சீக்கிய சமூகத் தினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்