
கொழும்பு, மே 18- சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவை விடு தலை செய்வதற்கு அந்நாட்டு அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தத் தகவலை அதிபர் மாளிகைச் செய்தித் தொடர்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்தார்.
பொன்சேகா எப்போது விடுவிக்கப் படுவார், அவரது மனைவி அனோ மா கூறியதைப் போல விடுதலை நிபந்தனையற்றதாக' இருக்குமா என்று கேட்டபோது, அவை தொடர்பாக இன்னும் முடி வெடுக்கப் படவில்லை. இப்போ தைக்கு அமைச்சரவையின் ஒப்பு தலை மட்டும் அதிபர் பெற்றிருக் கிறார்'' என்றார் ஜெயசேகர.
பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக அனோமாவை அதிபர் ராஜபக்சே புதன்கிழமை சந்தித்துப் பேசினார். பொன்சேகாவின் ஜனநாயக தேசியக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரன் அலஸ் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. பொன்சேகாவை விடுவிப்பதற்காக அரசு தரப்பிலான நிபந்தனைகள் பற்றி அப்போது எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அலஸ் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய பொன்சேகா, ராஜபக்சே உள்ளிட் டோர் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளைக் கூறினார். பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக் சேவை எதிர்த்து நின்று தோல்வி யடைந்தார்.
இதையடுத்து, அரசுக்கு எதிராகச் செயல்படுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2010, பிப்ரவரி 8ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். ராணுவ மற்றும் மக்கள் நீதிமன்றங்களில் இது தொடர்பாக நடந்த வழக்குகளில் அவருக்கு ஒட்டுமொத்தமாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பொன்சேகாவோ, அவரது மனைவி, மகள் உள்ளிட்ட நெருங்கிய குடும்பத்தினரோ கோரினால் கருணை அடிப்படையில் அவரை விடுவிப்பது பற்றிப் பரிசீலிக்கப் படும் என்று பல்வேறு தருணங் களில் ராஜபக்சே அறிவித்தார்.
ஆனால், கருணை வழங்குவது தொடர்பான பேச்சுகள் எழும் போதெல்லாம், பொன்சேகாவும் அவரது குடும்பத்தினரும், கருணை கோரும் வகையில் எந்தக் குற்றமும் செய்யவில்லை'' என்று கூறி அதி பரின் அழைப்பை நிராகரித்து வந்தனர். பொன்சேகா அமெரிக் காவின் குடியுரிமை பெற்றவர் என்பதால், அவரை விடுவிக்க வேண் டும் என்று அந்த நாடு இலங்கைக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மே 18ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) அமெரிக்காவில் அந் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனை இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் சந்திக்க இருக்கும் நிலையில், யாரும் கருணை கோரா மலேயே பொன்சேகாவை விடுவிக் கும் முடிவை அரசு எடுத்திருப் பதற்கும் இதுவே காரணம் என்றும் நம்பப்படுகிறது.