இஸ்லாமாபாத், மே.18- பாகிஸ்தானில் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதி வீடுகள் மீது விழுந்து நொறுங்கின. இதில் 4 விமானிகள் பலியானார்கள். வீடுகளில் இருந்த 3 குழந் தைகள், பெண் உள்பட 5 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
பாகிஸ்தானில் உள்ள ரிசால்பூர் என்ற இடத்தில் விமானப்படை பயிற்சி அகாடமி உள்ளது. இங்கிருந்து நேற்று காலை 10 மணி அளவில் 2 போர் விமானங்கள் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றன.
சிறிது நேரத்தில் அந்த 2 போர் விமானங் களும் எதிர்பாராதவிதமாக நடுவானில் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதின. இதனால் 2 விமானங்களும் தீப்பிடித்து எரிந்த படி தரையை நோக்கி பாய்ந்து வந்தன.
விபத்துக்குள்ளான இந்த 2 போர் விமானங் களும் பெஷாவர் நகரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ரஷ்கை என்ற ஊரில் உள்ள வீடுகள் மீது விழுந்து நொறுங் கின. இதில் 2 வீடுகளின் கூரைப்பகுதி, சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தன. விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் அந்த பகுதியில் சிதறி கிடந்தன.
இதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஓடி வந்து மீட்பு பணி யில் ஈடுபட்டார்கள். வீட்டின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டார்கள். இச்சம்பவத்தில் போர் விமானங்களை ஓட்டி வந்த 4 விமானிகளும் உயிர் இழந்தனர்.
வீடுகளில் வசித்த 3 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. ராணுவ அதிகாரிகளும், காவல்துறை யினரும் சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 11ஆம் தேதி கராச்சி அருகே போர் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது. தற்போது ஏற்பட்ட விபத்து 2ஆவது சம்பவம் ஆகும்.