Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

நிகழ்வுகள்

ஆர்ப்பாட்டம் நடத்திய 300 போராட்டக்காரர்களின்

ஜெர்மனியிலுள்ள அய்ரோப்பியன் மத்திய வங்கி அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய 300 போராட்டக்காரர்களின் கூடாரத்தினை காவலர்கள் அப்புறப்படுத்தினர்.

ஸ்குவாஷ்: பல்லீகல் வெற்றி

லண்டன், மே 17- பிரிட் டிஷ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொட ரின் இரண்டாவது சுற் றுக்கு இந்தியாவின் தீபிகா பல்லீகல், சவுரவ் கோசால் முன்னேறினர்.
லண்டனில், ஆலம் பிரிட்டிஷ் ஓபன் ஸ்கு வாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றை யர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தீபிகா பல் லீகல், எகிப்தின் ஓம்னியா அப்டல் கவியை சந்தித் தார். இதில் பல்லீகல் வெற்றி பெற்று, இரண் டாவது சுற்றுக்கு முன் னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந் தியாவின் சவுரவ் கோசால், எகிப்தின் மார்வன் எல் ஷார்பாகியை சந்தித்தார். இதில் கோசால் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சானியா மிர்சா இணை தோல்வி

ரோம், மே.17- இத்தா லியில் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் 2ஆவது சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)-பெதானி மாதெக் (அமெரிக்கா) இணை, அமெரிக்காவின் லிசெல் ஹூபர்-லிசா ரேமண்ட் இணையை எதிர்கொண்டது. இதில் சானியா மிர்சா இணை  தோல்வி கண்டு வெளி யேறியது. பெண்கள் ஒற் றையர் பிரிவில் 2ஆவது சுற்றில் ஆஸ்தி ரேலிய வீராங்கனை சமந்தா ஸ்டோசுர் சாரா எரானி (இத்தாலி) இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன் னேறியது.

உலக குத்துச்சண்டை மேரி கோம் தோல்வி


குயின்ஹன்ங்டோ, மே 17- உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் காலிறு தியில் இந்திய வீராங் கனை மேரி கோம் (51 கி.கி.,) அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சீனாவில் உள்ள குயின் ஹன்ங்டோ நகரில், 7 ஆவது பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் 51 கி.கி., எடைப்பிரிவு காலி றுதியில், அய்ந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம், உலகின் நம்பர்-2' வீராங்கனை யான இங்கிலாந்தின் நிகோலா ஆதம்சை எதிர் கொண்டார். இதில் மேரி கோம் 11-13 என்ற கணக் கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறி னார். இதன்மூலம் மேரி கோம், லண்டன் ஒலிம் பிக் போட்டிக்கு தகுதி பெறுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இவர் லண்டன் ஒலிம்பிக் போட் டியில் விளையாடும் வாய்ப்பை பெற, அரை யிறுதியில் நிகோலா ஆதம்ஸ், ரஷ்யாவின் எலினா சேவ்லிவாவை வீழ்த்த வேண்டும். இதே நிலைதான் 60 கி.கி., எடைப்பிரிவு காலிறுதி யில் தோல்வி கண்ட இந் திய வீராங்கனை சரிதா தேவிக்கும் ஏற்பட்டுள்ளது.
பின், +81 கி.கி., எடைப்பிரிவு காலிறுதி யில் இந்தியாவின் கவிதா 15-14 என்ற கணக்கில் துருக்கியின் செம்சி யாராலியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னே றினார். இதன்மூலம் இத் தொடரில் இந்தியாவுக்கு ஒரு பதக்க வாய்ப்பு ஏற் பட்டுள்ளது.
மற்ற பிரிவு காலிறு திப் போட்டிகளில் இந் தியாவின் பிங்கி ஜாங்ரா (48 கி.கி.,), ஜென்னி (81 கி.கி.,), மீனா ராணி (64 கி.கி.,) ஆகியோர் தோல்வி யடைந்து வெளியேறினர்.

நுகர்வோர் பொருள்களின் கணக்கெடுப்பு விவரம் வெளியீடு

நுகர்வோர் பொருள்கள் தயாரிக் கும் நிறுவனமான ப்ரோக்டர் அண்ட் கேம்பெல் அன்னையர் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகள் அன்னையரிடம் எவ்வாறு நன்றி பாராட்டுகிறார்கள் என்பது பற்றி பல்வேறு நாடுகளில் நடத்திய கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. பெண்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருள்கள் தயாரித்து வரும் பி அண்ட் ஜி (ஞழு) நிறுவனம் நடத்திய சர்வேயின்படி இந்தியர்களும் சீனர்களும் அன்னையரிடம் அதிகம் அன்பு பாராட்டுகிறார்கள். குடும்பத்திற்கு அன்னையர் செய்த தியாகம், அன்னையர்களின் பங்களிப்பு போன்றவை பெரிதும் போற்றப்படுகிறது.


இந்த சர்வே பன்னிரண்டு நாடுகளில் 3000 பேர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆசிய நாடுகளில் அன்னையர் குடும்பத்தின் முதுகெலும்பாக கருதப்படுகின்றனர். 55 சதவிகித பெண்களே அன்னையரிடம் நன்றி பாராட்டுகின்றனர். அன்னையரின் தியாகத்திற்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று இந்த சர்வே மூலம் புலப்படுகிறது. 92 சதவிகித இந்திய பெண்கள் அன்னையரைப் போல் முன் மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 34 சதவிகிதம் மட்டும் அன்னையரை முன்மாதிரியாக கொண்டு வாழ நினைக்கிறார்கள் என்று இந்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்