கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று ஆணை பிறப் பித்துள்ளது.
இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இந்தத் தீர்ப்பின்மீது மேல்முறையீடுக்குச் செல்லாமல் தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற ஆணையை செயல்படுத்தவேண்டும்.
ரூ.7000 கோடி விவசாயக் கடனை கலைஞர் அவர் கள் முதலமைச்சராக இருந்தபோது, மாநில அரசே அந்தச் சுமையை ஏற்று தள்ளுபடி செய்தது என்பதை நினை வூட்டுகிறோம். கூட்டுறவுக் கடன்கள் மட்டுமன்றி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
4.4.2017