பாரீஸ், ஜூன் 16 ரஷ்யாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், ஏரோஸ்பேஷ் இன்டர்நேஷனல் ஆய்வு மய்ய தலைவருமான டாக்டர் இகோர் அசுர்பெய்லி விண்வெளியில் ஒரு நாட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு அஸ்கார்சியா என பெயரிடப்பட்டுள்ளது.
விண்வெளியில் உருவாகும் புதிய நாடு குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி பாரீசில் அறிவித்தார். அதில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சர்வதேச அளவில் 200 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். அறிவிப்பு வெளியிட்ட 20 நாளில் இவ்வளவு பேர் மனு செய்து இருந்தனர்.
அவர்களில் 2 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிதாக உருவாகும் விண்வெளி நாட்டில் குடியேற அனுமதி சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.