பாஜகவினர் ஆளும் மாநிலங்களில்தான் அதிகம்!
புதுடில்லி, ஜூன் 14 -தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் பழங்குடி யினர் மீதான காவல்துறையினர் அத்துமீறல்களில், பாஜக ஆளும் மாநிலங்களே முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.
காவல்துறையின் செயல் திறனை அறியும் விதமாக, தேசிய குற்றவியல் ஆணையம், நாடு முழுவதும் 22 மாநிலங்களில் கணக்கெடுப்பு ஒன்றை நடத் தியுள்ளது. 15 ஆயிரம் பேர் இந்தக் கணக்கெடுப்பில் பங் கேற்று, காவல் நிலையத்தில் காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதம், காவல்துறை யினரால் தங்களுக்கு ஏற் பட்ட பாதிப்பை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த கணக்கெடுப்பில்தான், பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமான தாழ்த்தப்பட்டவர்கள் - பழங்குடியினர் காவல்துறை அத்துமீறலுக்கு உள்ளாகியிருப் பதுதெரியவந்துள்ளது.பாஜக ஆளும் ராஜஸ்தானில், 78 சதவிகிதம் பழங்குடி மக்களும்,குஜராத்தில்54 சதவிகிதம் பழங்குடி மக்க ளும் காவல்துறையினரின் சித் ரவதைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதேபோல சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்ட்டிரா, அசாம், ஒடிசாமாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி மக்களும், தங்களுக்கு காவல்துறைமீது நம்பிக்கை இல்லை என்று பதிவு செய்துள்ளனர்.உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகா ராஷ்ட்டிரா, பீகார் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களும் காவல்துறையால்அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.காங்கிரசு ஆளும் பஞ்சாப், ஆம் ஆத்மி ஆட்சியிலிருக்கும் டில்லி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி நடத்தும் தெலங்கானா மாநிலங்களிலும் காவல்துறை ஒடுக்குமுறை அதிகளவில் இருப்பதாக தாழ்த்தப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.